தமிழகத்தில் தனியார் வசம் வரும் காலை உணவு திட்டம் – நிபந்தனைகளை வெளியிட்ட அரசு!
தமிழக அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அமலில் இருக்கும் காலை உணவு திட்டத்தை தனியார் வசம் ஒப்படைக்க அரசு திட்டமிட்டு வருகிறது.
அரசு திட்டம்
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முதல்வரின் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் மூலம் ஒரு ஆண்டில் 66,030 மாணவர்கள் பயன்பெறுவார்கள். மேலும் இந்த திட்டத்திற்கு ஒரு ஆண்டுக்கு 19 கோடி ரூபாய் செலவாகிறது. இந்நிலையில் இந்த திட்ட பணிகளை தனியார் நிறுவனம் மூலம் செயல்படுத்தவும், ஒப்பந்தத்தை நிர்ணயம் செய்யவும், துணை ஆணையர் சரண்யா ஹரி தலைமையில் குழு அமைக்கப்பட இருக்கிறது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு புது அப்டேட் – வெளியான அறிவிப்பு!
இந்த குழுவில் கல்வி அலுவலர், கூடுதல் கல்வி அலுவலர், நிதி ஆலோசகர், தலைமை பொறியாளர், மேற்பார்வை பொறியாளர் ஆகியோர் இருப்பார்கள். மேலும் தனியார் வசம் கொண்டு சென்ற பின் கடைபிடிக்க வேண்டிய நிபந்தனைகள் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன் படி அனைத்து பள்ளிகளிலும் ஒரே மாதிரி காலை உணவு வழங்க வேண்டும் எனவும், அதற்கான பட்டியல் கல்வித்துறை மூலம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் காலை 8 மணிக்கு பள்ளியில் காலை உணவு வழங்கப்பட வேண்டும் எனவும், கால தாமதம் ஏற்பட கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.