தமிழகத்தின் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிக்கை!

0
தமிழகத்தின் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் அறிக்கை!
தமிழகத்தின் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் அறிக்கை!
தமிழகத்தின் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிக்கை!

தமிழகத்தில் இன்று தென்‌ தமிழக கடலோர மாவட்டங்கள்‌ உட்பட 6 மாவட்டத்தில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் 27ம் தேதி வரையிலான வானிலை நிலவரத்தை பற்றியும் தெரிவித்துள்ளது.

வானிலை தகவல்‌

தமிழகத்தில் தற்போது குமரி கடல் பகுதியை சுற்றி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின்‌ காரணமாக தென்‌ தமிழக கடலோர மாவட்டங்கள்‌, புதுக்கோட்டை, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அத்துடன் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்யும். மேலும் வருகிற 27ம் தேதி வரையிலான வானிலை நிலவரத்தை பற்றி விரிவாக பார்க்கலாம்.

ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கம், ஏப்.1 முதல் பரிசோதனை நிறுத்தம் – பிரதமர் அறிவிப்பு!

குமரி கடல்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய பகுதியில்‌ நிலவும்‌ வளி மண்டல மேலடுக்கு சுழற்சியின்‌ காரணமாக

23.02.2022: தென்‌ தமிழக கடலோர மாவட்டங்கள்‌, புதுக்கோட்டை, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இலேசான / மிதமான மழை பெய்யக்கூடும்‌.

24.02.2022: தென்‌ தமிழகம்‌, புதுக்கோட்டை, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌ மற்றும்‌ நாகப்பட்டினம்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இலேசான / மிதமான மழை பெய்யக்கூடும்‌.

25.02.2022: தென்‌ தமிழக கடலோர மாவட்டங்கள்‌, புதுக்கோட்டை, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இலேசான / மிதமான மழை பெய்யக்கூடும்‌.

26.02.2022: தென்‌ தமிழகம்‌, புதுக்கோட்டை, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இலேசான முதல்‌ மிதமான மமை பெய்யக்கூடும்‌. ஏனைய மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இலேசான மழை பெய்யக்கூடும்‌.

27.02.2022: தென்‌ தமிழகம்‌, நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இலேசான முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை

அடுத்த 48 மணி நேரத்துற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்‌சியஸை ஓட்டி இருக்கும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!