தமிழகத்தில் அரையாண்டு தேர்வு ரத்து – மாணவர்கள் மகிழ்ச்சி !

0
தமிழகத்தில் அரையாண்டு தேர்வு ரத்து - மாணவர்கள் மகிழ்ச்சி !
தமிழகத்தில் அரையாண்டு தேர்வு ரத்து - மாணவர்கள் மகிழ்ச்சி !

தமிழகத்தில் அரையாண்டு தேர்வு ரத்து – மாணவர்கள் மகிழ்ச்சி !

கொரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த எட்டு மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் தமிழக பள்ளி கல்வித்துறை தற்போது அரையாண்டு தேர்வை ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

TN Police “FB Group” Join Now

ஆன்லைன் மூலம் கல்வி:

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா நோய் தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் சென்ற கல்வியாண்டில் ஒன்று முதல், 10ம் வகுப்பு வரை தமிழகத்தில், ஆண்டு இறுதி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. மேலும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் அடிப்படையில், தேர்ச்சி அறிவிக்கப்பட்டு, மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட்டது.

இன்னும் பள்ளிகள் திறக்க தாமதமாவதால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவும் கல்வி தொலைக்காட்சி மூலமாகவும் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நடப்பு கல்வி ஆண்டுக்கான காலாண்டு தேர்வுகள் அரசுப் பள்ளிகளில் நடத்தப்படவில்லை. ஆனால் சில தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலமாகவே தேர்வுகளை நடத்தின.

அரையாண்டு தேர்வு ரத்து:

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் அரையாண்டுத் தேர்வு நடத்தப்படும் நிலையில், மாணவர்கள் நலன் கருதி இந்த ஆண்டுக்கான அரையாண்டுத் தேர்வை ரத்து செய்வதாக தமிழக பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. இந்த செய்தி மாணவர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!