தமிழக தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூல் – நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க புகார் அளிக்கும் வகையில் கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டும் என கல்வியாளர்கள் அரசை வலியுறுத்தியுள்ளனர்.
கூடுதல் கட்டணம்:
தமிழக பள்ளிகளில் கல்விக் கட்டணம் அரசு நிர்ணயித்த தொகையை விட கூடுதலாக வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்து வருகிறது. இந்த புகார்கள் 15 வருட காலமாக நீடிக்கிறது. தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க விரும்பும் நடுத்தர வர்க்கத்தினருக்கு இந்த கட்டணம் பெரும் சவாலாக உள்ளது. தனியார் பள்ளிகள் கூடுதல் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவதாகவும், சீருடைகள் வழங்கப்படுவதாகவும் கூறி பெற்றோர்களிடம் இருந்து அதிக கட்டணத்தை வசூலிக்கின்றனர்.
தமிழகத்தில் ஜூன் 5க்கு பிறகு முழு ஊரடங்கு நீட்டிப்பு? முதல்வர் நாளை ஆலோசனை!
தமிழகம் முழுவதும் 12,600க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது பற்றிய புகார்களை தெரிவிக்க மக்களுக்கு அரசு சார்பில் தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரி போன்ற வசதிகளை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனாலும் அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. மேலும் இந்த கொரோனா காலத்தில் தனியார் பள்ளிகள் பெற்றோர்களுக்கு தொடர்ந்து கட்டணம் செலுத்த வேண்டும் என அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
TN Job “FB Group” Join Now
இது குறித்து பலர் புகார் அளித்து வந்ததால் அரசு, தனியார் பள்ளிகளில் இந்த ஊரடங்கு காலத்தில் குறிப்பிட்ட அளவு கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் அரசு உத்தரவிட்டது. மீதி தொகையை பள்ளிகள் திறந்த பிறகு வசூல் செய்து கொள்ளலாம் என அறிவுறுத்தியுள்ளது. மேலும் தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது குறித்து புகார் தெரிவிக்க அரசு கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டும் என கல்வியாளர்கள் அரசை வலியுறுத்தியுள்ளனர். நிகழ் கல்வியாண்டில் தனியார் பள்ளிகள் 75 சதவீத கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் எனவும் அரசு அறிவுறுத்தியுள்ளது.