இளைஞர்களுக்கு ஜாக்பாட் .. மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – 150 நிறுவனங்கள் பங்கேற்பு!
சென்னையில் செப்.16 ஆம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம் வாயிலாக 1,500 காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
வேலைவாய்ப்பு முகாம்:
தமிழக இளைஞர்கள் வேலை வாய்ப்பை பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பாக அவ்வப்போது வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் செப்.16 ஆம் தேதி சென்னையில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் 150-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளனர்.
முகாமானது மாதாவரத்தில் உள்ள ஜெய்கோபால் அகர்வால் அகர்சன் கல்லூரியில் காலை காலை 8 மணிக்கு தொடங்கி பிற்பகல் 3 மணி வரை நடைபெற உள்ளது. இதில் 8,10,12ம் வகுப்பு டிகிரி மற்றும் டிப்ளமோ உள்ளிட்ட கல்வித்தகுதிகளை உடையோர் பங்கேற்கலாம். மேலும் முகாமில் தொழில் முனைவோர்களுக்கான ஆலோசனைகளும் வழங்கப்படவுள்ளது. இம்முகாம் வாயிலாக 1,500 காலிப்பணியிடங்கள் நிரப்பபடவுள்ளதாக நிறுவனங்கள் தெரிவித்துள்ளனர். முகாமில் பங்கேற்கவுள்ளவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.