சமூக வலைதள பயனர்கள் கவனத்திற்கு – தமிழ்நாடு காவல்துறை எச்சரிக்கை!
தமிழகத்தில் சமூக வலைத்தளங்களில் ஆபாச கருத்துக்கள், மற்றும் சாதி பிரச்சனைகளை தூண்டும் வகையில் கருத்துக்களை பதிவிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக காவல்துறை எச்சரித்துள்ளது.
காவல்துறை அறிவிப்பு:
இந்தியாவில் சமீபத்தில் தகவல் தொழில்நுட்பம் விதிகள் 2021 அறிவிக்கப்பட்டது. அதன்படி, 50 லட்சத்துக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட சமூக செய்தி அனுப்பும் ஊடகங்கள் அனைத்தும் நாட்டின் நலனுக்கு நன்மைக்கு தீங்கு விளைவிக்கும் வகையிலான செய்திகளை அனுப்பும் நபரை கண்டறியும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த விதியை மத்திய அரசு கடந்த பிப்ரவரி 25ம் தேதி வெளியிட்டது. மத்திய அரசின் இந்த விதிகளை அனைத்து சமூக வலைத்தளங்களும் ஏற்றுக் கொண்டது.
பான் கார்டு தொலைந்து விட்டால் மீண்டும் பெறுவது எப்படி? எளிய வழிமுறைகள்!
தற்போது, தமிழகத்தில் இனி பேஸ்புக், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் மக்கள் பதிவிடும் கருத்துக்கள் காவல்துறையினரால் கவனிக்கப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு மாதங்களாக சமூக வலைத்தளங்களில் ஆபாச கருத்துக்கள் மற்றும் விடீயோக்களை பதிவிடுபவர்கள் 16 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதுபோன்ற, 75 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில், இனிமேல் சமூக வலைத்தளங்களில் பெண்களை தவறாக சித்தரிக்கும் கருத்துக்கள் மற்றும் சாதி பிரச்சனைகளை தூண்டுவது போன்ற கருத்துக்களை பதிவிடுவோர் மேலும், அரசியல் கட்சியினை அவதூறாக பிரதிபலிக்கும் வகையிலான கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்தால் உடனடியாக கைது செய்யப் படுவார்கள் என்று தமிழக காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.