கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றாவிட்டால் தளர்வுகள் வாபஸ் – மத்திய அரசு!
இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்து வருவதை தொடர்ந்து மாநிலங்கள் தோறும் தளர்வுகள் கொடுக்கப்பட்டு வருகிறது. இவற்றில் முறையான தளர்வுகளை பின்பற்றவில்லை எனில் தளர்வுகள் திரும்ப பெறப்படும் என மத்திய சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
ஊரடங்கு தளர்வுகள்
கடந்த 2 மாதங்களாக பெருமளவு பாதிப்புகளை ஏற்படுத்தி வந்த கொரோனா 2 ஆம் அலை பரவலானது தற்போது குறைந்து வருவதை தொடர்ந்து, மாநிலங்கள் தோறும் விதிக்கப்பட்டு வந்த முழு ஊரடங்கில் இருந்து சில தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் பொது மக்கள் அதிகம் கூடும் திரையரங்குகள் உள்ளிட்ட சேவைகளுக்கு மட்டும் அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், ஏறத்தாழ அனைத்து மாவட்டங்களிலும் பெரும்பாலான தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.
ஜியோ (Jio) சிம் பயனர்கள் கவனத்திற்கு – குறைந்த விலையில் டேட்டா!
இந்நிலையில் மலைப்பிரதேசங்களில் கொரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகளை மக்கள் முறையாக பின்பற்றவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தளர்வுகள் திரும்பப் பெறப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால், ஊரடங்கில் இருந்து தளர்வுகள் அளிப்பதை மாநிலங்கள் தொடர்ந்து கவனிக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்தது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லவ் அகர்வால் கூறுகையில், ‘நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெறுபவர்களின் எண்ணிக்கை 5 லட்சமாக குறைந்துள்ளது. அந்த வகையில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஒடிசா, ஆந்திரபிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் 10 %க்கும் அதிகமான பாதிப்புகள் பதிவாகி வருவதால், 2 ஆம் அலை பரவல் முற்றிலுமாக குறையவில்லை. இதனால் மலைப்பிரதேசங்களுக்கு செல்லும் மக்கள் முறையான நெறிமுறைகளை பின்பற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும். இல்லை என்றால் தளர்வுகள் திரும்பப் பெறப்படும்’ என கூறியுள்ளார்.