தமிழக மெட்ரிக்குலேஷன் பள்ளி இயக்குனர் மாற்றம் – பள்ளிகல்வித்துறை அறிவிப்பு!
தமிழக பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. தற்போது முதன்மை கல்வி அலுவலர்கள் உட்பட முக்கிய அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதனை தொடர்ந்து இன்று தமிழ்நாடு மெட்ரிக்குலேஷன் பள்ளி இயக்குனராக நாகராஜ முருகன் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய இயக்குனர்:
தமிழகத்தில் பள்ளிக்கல்வியை மாணவர்களுக்கு தரமானதாக அளிக்க வேண்டும் என்ற நோக்கில் கல்வி தொடர்பாக பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இத்தகைய திட்டங்கள் மாணவர்கள் மத்தியில் நல்லதொரு கற்றல் விளைவை ஏற்படுத்துவதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறையில் நிர்வாக முறைகளும் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.
Exams Daily Mobile App Download
அண்மையில் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளுக்கென தனித்தனி கல்வி அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். ஒரு மாவட்ட கல்வி முதன்மை அலுவலரே தொடக்க மற்றும் நடுநிலை பள்ளி செயல்பாடுகளை கண்காணிப்பதில் சிக்கல் எழுந்தது. அதனால் நிர்வாகம் சார்ந்த பணிகளை முழுமையாக செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனை சரி செய்ய தொடக்ககல்விக்கென்று தனி அலுவலர் அதே போல நடுநிலை கல்விக்கென்று தனி அலுவலர் நியமிக்கப்பட்டார்கள்.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு அக்டோபர் மாத தானியங்கள் நிலுவை – மத்திய அரசின் ஒதுக்கீடு எங்கே?
Follow our Instagram for more Latest Updates
இந்த நிலையில் தற்போது தமிழ்நாடு மெட்ரிக்குலேஷன் பள்ளி இயக்குனராக நாகராஜ முருகன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன் பதவியில் இருந்த கருப்பசாமி அவர்கள் நேற்றுடன் ஓய்வு பெற்ற நிலையில் தற்போது புதிய இயக்குனராக நாகராஜ முருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து கமிஷனர், இணை இயக்குனர்களை அரசு இட மாறுதல் செய்ய உள்ளது. தற்போது அதற்கான பட்டியல் தயாராகி வருகிறது. விரைவில் அது குறித்த அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.