தமிழகத்தில் ஜூன் 30ம் தேதி வரை நீட்டிப்பு – தேர்தல் செலவு கணக்கு தாக்கல் அவகாசம்!
தமிழகத்தில் நடந்து முடிந்துள்ள சட்டப்பேரவை தேர்தலின் போது ஏற்பட்ட செலவு கணக்கை தாக்கல் செய்ய அனைத்து வேட்பாளர்களுக்கும் ஜூன் 30 வரை கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
செலவு கணக்கு
கொரோனா ஊரடங்கு காரணமாக தேர்தல் செலவு கணக்குகளை தாக்கல் செய்ய அனைத்து வேட்பாளர்களுக்கும் ஒரு மாத கால அவகாசம் வழங்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த மாநிலங்களுக்கான புதிய சட்டப்பேரவை குறித்த தேர்தல் முடிவானது மே 2 ஆம் தேதி வெளியிடப்பட்டது.
TN Job “FB Group” Join Now
இதை தொடர்ந்து இந்த 5 மாநிலங்களிலும் புதிய அரசு பொறுப்பேற்றுள்ளது. பொதுவாக ஒவ்வொரு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு, 30 நாட்களுக்குள்ளாக வேட்பாளர்கள் தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். அந்த வகையில் இந்த 5 மாநிலங்களுக்கும் நடைபெற்ற தேர்தலின் போது ஏற்பட்ட செலவு கணக்கை தாக்கல் செய்ய ஜூன் 1 ஆம் தேதி கடைசி நாள் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த நிலையில் நாடு முழுவதும் கொரோனா 2 ஆம் அலை தாக்கம் காரணமாக தமிழகம், புதுச்சேரி,கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ் ஆப் (WhatsApp) பயனர்களுக்கு செம அறிவிப்பு – மூன்று முக்கிய அம்சங்கள்!!
இதனால் அரசு அலுவலகங்களில் அத்தியாவசிய பணிக்காக 50 சதவீத ஊழியர்கள் மட்டுமே சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். இந்த சூழலில் தேர்தல் செலவு கணக்குகளை வேட்பாளர்கள் தாக்கல் செய்தாலும், அதை சரி பார்த்து ஒப்புதல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் வேட்பாளர் செலவு கணக்கை தாக்கல் செய்ய ஒரு மாதம் கால அவகாசம் கூட்டி வழங்குவதாக தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி செலவு கணக்கை தாக்கல் செய்ய ஜூன் 30 ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.