தமிழக அரசு பள்ளிகளில் ஜூன் 14 முதல் மாணவர் சேர்க்கை மீண்டும் தொடக்கம் – அரசு அறிவிப்பு!!

0
தமிழக அரசு பள்ளிகளில் ஜூன் 14 முதல் மாணவர் சேர்க்கை மீண்டும் தொடக்கம் - அரசு அறிவிப்பு!!
தமிழக அரசு பள்ளிகளில் ஜூன் 14 முதல் மாணவர் சேர்க்கை மீண்டும் தொடக்கம் - அரசு அறிவிப்பு!!
தமிழக அரசு பள்ளிகளில் ஜூன் 14 முதல் மாணவர் சேர்க்கை மீண்டும் தொடக்கம் – அரசு அறிவிப்பு!!

தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் வரும் ஜூன் 14ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

மாணவர் சேர்க்கை:

தமிழக அரசு மற்றும் அரசு உதவிக்கு பெறும் பள்ளிகளில் 2021 – 2022ம் கல்வியாண்டுக்கான 1 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கை கடந்த ஏப்ரல் மாதத்தில் தொடங்கப்பட்டது. கொரோனா பரவல் அச்சுறுத்தல் மற்றும் அதனை தொடர்ந்து விதிக்கப்பட்ட ஊரடங்கு போன்ற காரணங்களால் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டது. மேலும், மே மாதத்தில் கோடை விடுமுறையும் அளிக்கப்பட்டு இருந்தது. இதனால் மாணவர் சேர்க்கை பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி – வானிலை ஆய்வு மையம்!

தற்போது கொரோனா பரவல் விகிதம் குறைந்து வருவதாலும், புதிய கல்வி ஆண்டு தொடங்க இருப்பதாலும் சேர்க்கை பணிகளை பள்ளிக் கல்வித்துறை தொடங்க முடிவு செய்துள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வரும் ஜூன் 14ம் தேதி முதல் தொடங்க இருப்பதாகவும், அதற்காக தலைமை ஆசிரியர்கள், நிர்வாக ஊழியர்கள் மற்றும் சில ஆசிரியர்கள் ஜூன் 14ம் தேதி முதல் பணிக்கு வரவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கடந்த ஆண்டு மட்டும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 5 லட்சம் புதிய மாணவர் சேர்க்கை செய்யப்பட்டது. நடப்பு ஆண்டிலும் அதிக மாணவர்கள் சேர்க்கைக்கு வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

TN Job “FB  Group” Join Now

மாணவர்களுக்கான மதிய உணவு திட்டத்தின் பொருட்களுடன் சேர்த்து முட்டைகளும் வழங்கப்பட உள்ளது. மேலும், அனைத்து மாணவர்களுக்கும் உணவு பொருட்கள் கிடைப்பதை தலைமை ஆசிரியர் உறுதி செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள் என்று கல்வித்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். தமிழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பி.கே. இளமாறன் அவர்கள், ஜூன் 14 வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால் மாணவர் சேர்க்கையை ஜூன் 15ம் தேதியாக மாற்றி அமைக்குமாறு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். ஊரடங்கு நாளில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர போக்குவரத்து வசதிகள் இருக்காது. எனவே மாணவர் சேர்க்கையை ஜூன் 15ம் தேதி முதல் தொடங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!