சென்னை : கிடுகிடுவென உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – இன்றைய நிலவரம்!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 256 ரூபாய் உயர்ந்துள்ளது. இம்மாத தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தை கண்டு வருகிறது.
தங்க விலை:
இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கால் அனைத்து தொழில்களும் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதனால் அதிகமான மக்கள் தங்கத்தில் முதலீடு செய்தனர். இதனால் தங்க விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. அரசின் முயற்சியால் கொரோனா கட்டுக்குள் வந்தததையடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கடைகள், அலுவலகங்கள் மீண்டும் செயல்பட தொடங்கியது. இதனால் தங்கம் விலை சற்று ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது.
திருப்பதி செல்லும் தமிழக பக்தர்களின் கவனத்திற்கு – தேவஸ்தான தலைவர் அறிவிப்பு!
சுபமுகூர்த்த தினங்களும், பண்டிகை காலங்களிலும் தங்கம் விலை அதிகரித்து காணப்படுகிறது. இல்லத்தரசிகள் எப்போது நகை விலை குறையும் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றனர். நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்து சவரன் ரூ.34,984-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அக்.5 முதல் 14 நாட்களுக்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!
இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 அதிகரித்துள்ளது. ஒரு சவரன் ரூ. 35,240-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இன்றைய நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் 4,405 ரூபாயாக உள்ளது. தங்கத்தை தொடர்ந்து வெள்ளியின் விலை சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் ரூ.64.80 க்கு விற்பனையாகிறது.