தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நீட்டிப்பு – முதல்வர் விளக்கம்!!
தமிழகத்தில் வருகின்ற ஜூன் மாதம் 7ம் தேதி வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கும் நிலையில் தற்போது இதுகுறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் விளக்கமளித்துள்ளார்.
முழு ஊரடங்கு:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று குறைந்து வராத காரணத்தினால் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நடவடிக்கை வருகிற ஜூன் மாதம் 7ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனை தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அறிவித்தார். தற்போது தமிழகத்தில் ஊரடங்கு ஏன் நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் விளக்கமளித்துள்ளார். அதன்படி அவர் கூறியதாவது, கடந்த ஒரு வார கால பொதுமுடக்கத்தில் பாதிப்பின் எண்ணிக்கை சற்று குறைய தொடங்கியுள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்த எண்ணிக்கை மேலும் குறைவதற்காகவே இந்த முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். ஊரடங்கின் பொழுது தமிழக மக்கள் ஒத்துழைப்பு தரவில்லை எனில் கொரோனா சங்கிலியை உடைக்க நேரிடாது. மேலும் ஊரடங்கினால் மக்கள் சந்திக்கும் இன்னல்களை கருத்தில் கொண்டு நடப்பு மாதத்தில் 13 பொருட்கள் அடங்கிய மளிகை பொருட்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பாதிப்பு குறைந்துள்ளது.
தமிழகத்தில் மொத்த காய்கறி சந்தைகள் இயங்க அனுமதி – அரசு உத்தரவு!!
ஆனால் கோவை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. தற்போது இதனை குறைக்கும் வகையில் பல சிறப்பு ஏற்பாடுகளை மருத்துவ வல்லுநர்கள் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மக்கள் அனைவருக்கும் வீடு தேடி காய்கறி, மளிகை மற்றும் பழங்கள் வருவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. எனவே ஊரடங்கின் பொழுது மக்கள் அனைவரும் பாதுகாப்பாக வீட்டில் இருக்கும்படி தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தெரிவித்தார்.
I want the work