தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பங்கள் வரவேற்பு!
ஈரோடு மாவட்டத்தில் காலியாக உள்ள தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை 15 நாட்களுக்குள் அனுப்ப வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு அறிவிப்பு:
ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் (1 நபர்) பதவியினை பூர்த்தி செய்ய, ஈரோடு மாவட்டத்தில் வசிக்கும் கீழ்க்கண்ட கல்வி மற்றும் அனுபவம் உடையவர்களிடமிருந்து உரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 40 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு மூலமாக தெரிந்து கொள்ளலாம்.
மேலும் இந்த பணிகளுக்கான கல்வித்தகுதியாக அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் BL/LLB முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பதவியானது ஒப்பந்த நியமன அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டு தொகுப்பூதியமாக மாதம் ரூ.21000/- வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க இதற்கான விண்ணப்ப படிவத்தினை http://erode.nic.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் செய்தி வெளிவந்த நாளிலிருந்து 15 பணி நாட்களுக்குள் கீழ்க்கண்ட அலுவலக முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு 0424- 2225010 என்ற அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணபங்களை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு 6, முன்னாள் படைவீரர் மாளிகை, 2வது தளம், ஈரோடு-638001, தொலைபேசி : 0424 – 22250100 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் குறித்த காலத்திற்குள் இவ்வலுவலகத்தில் பெறப்பட வேண்டும். மேலும், அனைத்து தகுதிகளின் அடிப்படையில் இப்பதவியானது நியமனம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.