அரசு வேலைவாய்ப்பில் சலுகை – தமிழ் வழி படிப்பில் அதிகளவில் சேரும் மாணவர்கள்!!
தமிழ்வழியில் படிக்கும் மாணவர்களுக்கான மருத்துவ படிப்பு மற்றும் அரசு பணிகளில் குறிப்பிட்ட சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளதால் தமிழ்வழி படிப்பில் மற்றும் அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இடஒதுக்கீடு:
தமிழக அரசு தமிழ்வழியில் கல்லூரி படிப்பை முடித்தவர்களுக்கு அரசு பணிகளில் முன்னுரிமை வழங்கும் திட்டம் முன்னதாக இருந்தது. இதில், மாற்றத்தை ஏற்படுத்தி, ஆறாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை கட்டாயம் தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசு பணிகளில் 20% இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று அந்த திட்டம் திருத்தப்பட்டுள்ளது. மேலும், மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு தமிழக அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
தமிழக காவல் துறையினருக்கு விடுமுறை ரத்து – டி.ஜி.பி., அறிக்கை!!
மாற்றம்:
தமிழக அரசின் இந்த அறிவிப்பால் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையில் ஆங்கில வழியில் படித்த மாணவர்களை தமிழ்வழியில் மாற்றியுள்ளனர். மேலும், புதிதாக பள்ளிகளில் சேர்க்கும் பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை தமிழ்வழியில் சேர்க்கும் நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில் தமிழக தமிழாசிரியர் கழக முன்னாள் பொதுச்செயலாளர் இளங்கோ அவர்கள், அரசு வேலை வாய்ப்புக்காக ஆறாம் வகுப்பில் இருந்து தமிழ்வழியில் படிக்க வேண்டும் என்பதற்கு பதிலாக ஒன்றாம் வகுப்பில் இருந்தே தமிழ்வழியில் படித்திருக்க என சட்டம் சட்டம் வந்தால், இன்னும் சிறப்பாக இருக்கும் என்று அறிவித்துள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்