தமிழகத்தில் 10, 11 ஆம் வகுப்பு துணைத்தேர்வு ஹால்டிக்கெட் – இன்று வெளியீடு!
தமிழகத்தில் 10 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு நடைபெற உள்ள துணைத்தேர்வுக்கு இன்று முதல் (08.09.2021) நுழைவுச் சீட்டுகளை ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
துணைத்தேர்வு ஹால்டிக்கெட்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு நடைபெறும் பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. அதற்கு பதிலாக மதிப்பிட்டு முறையில் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. அனைத்து மாணவர்களும் இந்த ஆண்டு ஆல்பாஸ் செய்துள்ளனர். அதனால் கல்லூரிகளிலும் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் சில மாணவர்கள் மதிப்பிட்டு முறையிலான மதிப்பெண் முறையில் திருப்தி இல்லை என்று கருத்து தெரிவித்தனர்.
தமிழக பள்ளிகளில் அதிகரிக்கும் கொரோனா தொற்று – தலைமைச் செயலர் இன்று ஆலோசனை!
நேரடி தேர்வுகள் நடைபெற்றால் இதை விட கூடுதல் மதிப்பெண்கள் பெற்றிருப்போம் அதன் மூலம் உயர்கல்வியில் விருப்ப பாடத்தை தேர்வு செய்ய வாய்ப்பு கிடைத்திடும் என்று கூறினர். இதனால் அரசு கொரோனா தொற்று குறைந்தவுடன் மதிப்பெண்கள் குறைவு என்ற கருதும் மாணவர்களுக்கு மட்டும் துணைத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்தது. அதற்கான விண்ணப்ப பதிவும் ஆன்லைனில் நடைபெற்று தேர்வு தேதியும் அறிவிக்கப்பட்டது. தற்போது 10, 11 வகுப்புகளுக்கு நடைபெறவிருக்கும் துணைத்தேர்வுக்கு இன்று முதல் நுழைவுச்சீட்டு வெளியிடப்பட உள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு இலவச தரிசனம் – இன்று முதல் அனுமதி!
இன்று காலை 11 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்த 10, 11 ஆம் வகுப்பு மாணவர்கள் தங்களது நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. அதே போல 10, 11 ஆம் வகுப்பு தனித்தேர்வர்களும் நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவர்களுக்கு அனுமதி சீட்டில் உள்ள தேர்வு மையத்தில் 13.09.2021 மற்றும் 14.09.2021 ஆகிய இரு தினங்களில் செய்முறை தேர்வு நடைபெறவுள்ளது. இது குறித்த தகவல்களுக்கு தனித்தேர்வுகள் அனுமதி சீட்டில் உள்ள தேர்வு மையத்தின் தலைமையாசிரியரை அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.