திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு இலவச தரிசனம் – இன்று முதல் அனுமதி!
கொரோனா 2 ஆம் அலை பரவல் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரத்து செய்யப்பட்ட பக்தர்களின் இலவச தரிசனம், இன்று (செப்டம்பர் 8) முதல் மீண்டும் துவங்க இருப்பதாக தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.
இலவச தரிசனம்
ஆந்திரா மாநிலம் திருப்பதியில் அமைந்துள்ள ஏழுமலையான் கோயில் பிரசித்தி பெற்ற திருக்கோயில்களில் ஒன்றாகும். இந்த கோயிலுக்கு மட்டும் தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனத்துக்கு வருவது வழக்கம். இந்த கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனம், கட்டண தரிசனம், விஐபி தரிசனம், விவிஐபி தரிசனம் உள்ளிட்ட 4 முறைகளில் சுவாமியை தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டு வந்தது.
தமிழகத்தில் 6 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – முதல்வர் இன்று ஆலோசனை!
இதற்கிடையில் கடந்த ஆண்டு எதிர்பாராத விதமாக உருவான கொரோனா பேரலையால் திருப்பதி கோயிலில் பக்தர்கள் வழிபடுவதற்கு பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து கொரோனா 2 ஆம் அலை தொற்று பரவலால் இந்த ஆண்டு துவக்கம் முதல் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அந்த வகையில் கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் பக்தர்களுக்கு அனுமதிக்கப்பட்டு வந்த இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டது.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை: மீண்டும் முதலிடத்தை பிடித்தது இந்தியா!!
ஆனால் ரூ.300 கட்டணத்துடன் முன் பதிவு செய்திருந்தவர்களுக்கு மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டது. அந்த வகையில் தினசரி 15 ஆயிரம் பேர் மட்டுமே சுவாமியை தரிசனம் செய்து வந்தனர். அதாவது கொரோனா பரவலுக்கு மத்தியில் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் அதிகளவு பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் இந்த கட்டண தரிசனம் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தது.
முழு ஊரடங்கு ரத்து, அக்.4 முதல் கல்லூரிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!
இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் குறைந்திருப்பதையடுத்து பக்தர்களின் இலவச தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அந்த வகையில் முதல் கட்டமாக ஆந்திரா மாநிலம், சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த 2,000 பக்தர்களின் தரிசனத்துக்கு அனுமதி அளிக்க தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த எண்ணிக்கை வரும் நாட்களில் அதிகரிக்கப்படலாம் என்று தெரிகிறது.