முடிவுக்கு வரும் சன் டிவியின் டாப் Prime time சீரியல்.. வெளியான அதிர்ச்சி தகவல் – வருத்தத்தில் ரசிகர்கள்!
சன் டிவியில் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு கிட்டத்தட்ட 5 வருடங்களாக சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியல் திடீரென்று முடிய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரோஜா சீரியல்:
ரோஜா சீரியல் பல்வேறு நேர மாற்றங்களையும் கடந்து கிட்டத்தட்ட 5 வருடங்களாக சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பாகி வருகிறது. ரேட்டிங்கில் அதிக அளவிலான முறைகள் முதல் இடத்தை பிடிப்பது ரோஜா சீரியல் தான். இந்த சீரியலில் ஹீரோயின் பிரியங்கா நல்காரி ரோஜாவாக நடித்துள்ளார். ஹீரோ சிப்பு சூர்யன் அர்ஜுன் ஆக நடித்துள்ளார். இதை தவிர நடிகை வடிவுக்கரசி முதல் பல முக்கிய பிரபலங்கள் ரோஜா சீரியலில் நடித்து வருகின்றனர்.
Follow our Instagram for more Latest Updates
குழந்தையாக இருக்கும் போதே ரோஜா குடும்பத்தை விட்டு பிரிந்து காணாமல் போய் விடுகிறார். அர்ஜுன் ரோஜாவை காதலித்து மனைவியாக தன் வீட்டிற்கு கூட்டி வருகிறார். ஆனால் தன் பேத்தி ரோஜா தான் என்பது தெரியாமல் வடிவுக்கரசி அவரை எப்படியாவது வீட்டை விட்டு விரட்ட வேண்டும் என்று பல சதி திட்டங்களை அனுவுடன் சேர்ந்து போடுகிறார். அனு அர்ஜுனை தான் திருமணம் செய்ய வேண்டும் என்று பல முறை முயன்று தோற்று விடுகிறார்.
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஜிபி முத்து? வெளியான உண்மை நிலவரம்! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி!
Exams Daily Mobile App Download
குடும்பத்தினர் வைக்கும் அனைத்து சோதனைகளையும் தாண்டி தான் உண்மையாகவே அந்த குடும்பத்தை சேர்ந்த பெண் தான் என்பதை ரோஜா நிரூபித்து விட்டார். அதன்பிறகு பல அதிரடியாக திருப்பங்களையும் சந்தித்த ரோஜா சீரியல் சமீப காலமாக TRPயில் சற்று பின்தங்கி வருகிறது. தற்போது இத்தொடர் முடிவிற்கு வர உள்ளதாக சீரியல் வட்டாரத்தில் இருந்து நம்ப தகுந்த தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் ரோஜா சீரியலின் ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். தொடர்ந்து TRPயில் சறுக்கலை சந்தித்து கொண்டே இருப்பதால் சேனல் நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Appaada oru vazhiya mudinthaal seri. Now the story track is not at all interesting by the introduction of a second face for Roja a lady inspector Jessy.