தமிழகத்தில் இலவச பேருந்து பயணத்தால் பெண்கள் அவதி – போக்குவரத்து துறை நடவடிக்கை!!
தமிழகத்தில் பெண்களுக்கான இலவச பேருந்து திட்டத்தை காரணம் காட்டி பெண்களை பேருந்தில் ஏற்ற மறுக்கும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்க வைக்கப்பட்டுள்ளது.
இலவச பேருந்து திட்டம்:
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலில் திமுக கட்சியின் சார்பில் பெண்களுக்கான இலவச பேருந்து திட்டம் அமல்படுத்தப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் தற்போது பெண்களுக்கான இலவச பேருந்து திட்டம் அமல்படுத்தப்பட்டு லட்சக்கணக்கான பெண்கள் தினமும் பயனடைந்து வருகின்றனர். அதாவது, பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், வேலைக்கு செல்வோரிலிருந்து முதியவர் வரையிலும் அனைத்து பெண்களும் இலவச பேருந்து திட்டத்தால் பயனடைந்து வருகின்றனர்.
தங்கத்தின் விலையில் புதிய மாற்றம் – இது தான் நகை வாங்க சரியான நேரம்!!
ஆனால், தமிழகத்தில் ஒரு சில பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் பெண்களுக்கு இலவச டிக்கெட் என்பதால் அவர்களைப் பேருந்தில் ஏற்ற மறுப்பு தெரிவிக்கின்றனர். மேலும், ஒரு சில பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் இலவச டிக்கெட் என்பதனை காரணம் காட்டி அவர்களை அவமரியாதையாக நடத்துவதாகவும் பல்வேறு குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்நிலையில், இலவச பேருந்து திட்டத்தின் கீழ் பெண்களை பேருந்தில் ஏற்ற மறுக்கும் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் மீது போக்குவரத்து துறை அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.