12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து, நாடு முழுவதும் ஒரே மதிப்பீடு முறை – மாநில கல்வி அமைச்சர் கோரிக்கை!!
மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பரவல் காரணமாக 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக மாநில கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் அறிவித்துள்ளார்.
பொதுத்தேர்வு ரத்து:
கடந்த ஜூன் 1ம் தேதி அன்று பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட அதிகாரிகளுடன் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் பொதுத்தேர்வுகளை நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பு மற்றும் உடல்நலத்திற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். சிபிஎஸ்இ ன் அறிவிப்பை தொடர்ந்து நேற்று முதல் பல மாநில கல்வி வாரியங்கள் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வதாக அறிவித்து வருகிறது.
TN Job “FB Group” Join Now
மகாராஷ்டிரா மாநிலத்தில் கல்வி அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் அவர்கள் மாநில கல்வி வாரியத்தின் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக இன்று அறிவித்துள்ளார். மேலும், நாடு முழுவதும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான ஒரே மாதிரியான மதிப்பீடு முறையை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழக ரேஷன் கடைகளில் ரூ.2000 வழங்கும் பணி துவக்கம்!!
முன்னதாக அவர், 12ம் வகுப்பு மாணவர்களின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒரு மைல்கல்லாக உள்ளது. ஆனால் தற்போதைய சூழ்நிலைகளில் நம் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் மன நலனுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். ஏற்கனவே மாநிலத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, 9ம் வகுப்பில் மாணவர்களின் செயல்திறன் மற்றும் உள் மதிப்பீடுகளின் அடிப்படையில் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.