தமிழக ரேஷன் கடைகளில் ரூ.2000 வழங்கும் பணி துவக்கம்!!
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரணத்தொகையின் இரண்டாம் தவணையாக ரூபாய் 2000 டோக்கன் வழங்கும் பணி ஜூன் 2 ம் தேதி முதல் தொடங்கி உள்ளது. 14 வகை மளிகை பொருட்கள் மற்றும் நிவாரணத்தொகைக்கான டோக்கன் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
ரேசன் கடைகளில் டோக்கன்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் பரவல் காரணமாக மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகளால் மக்கள் வேலையிழந்து தவித்து வருகின்றனர். இந்த ஊரடங்கை சமாளிக்கும் வகையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு அரசு சார்பில் ரூபாய் 4000 நிவாரணத்தொகையாக வழங்கப்படும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்தார். அதன் படி மே மாதம் முதல் தவணை 2000 ரூபாய் வழங்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் மேலும் அதிகரித்த காரணத்தால் அரசு ஊரடங்கை மேலும் நீட்டித்துள்ளது. ஜூன் 7 ம் தேதி வரை தமிழகம் முழுவதும் தளர்வில்லா முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதத்திற்கான நிவாரணத்தொகையின் இரண்டாம் தவணை ரூபாய் 2000 வழங்கப்படவுள்ளது. இதற்கான அறிவிப்பு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான டோக்கன் வழங்கும் பணியில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். நாள் ஒன்றுக்கு ஒரு ரேஷன் கடையில் 200 பேருக்கு மட்டும் சுழற்சி அடிப்படையில் பொருட்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
Airtel, Jio, VI பயனர்கள் கவனத்திற்கு – சிறப்பு ரீசார்ஜ் திட்டங்கள்!
இந்த டோக்கனில் பெயர், முகவரி, எண், வழங்கப்படும் தேதி போன்றவை பதிவிடப்பட்டு வழங்கப்படுகிறது. குடியிருப்பு பகுதிகளுக்கு நேரடியாக சென்று டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா முழு ஊரடங்கு அமலில் உள்ள போதும், பொதுமக்களின் நலன் கருதி காலை 8 முதல் நண்பகல் 12 வரை ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த டோக்கன் வழங்கும் பணிகள் ஜூன் 2ம் தேதி முதல் தொடங்கியுள்ளது.