அக்.21ம் தேதி 8 முதல் 11ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!
ஒடிசா மாநிலத்தில் செயல்பட்டு வரும் அனைத்து விதமான பள்ளிகளும் அக்டோபர் 21ம் தேதி முதல் 8ம் வகுப்பில் இருந்து 11ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்காக மீண்டும் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது.
பள்ளிகள் திறப்பு
நாடு முழுவதும் கொரோனா 2ம் அலை பரவல் ஓய்ந்திருக்கும் சூழலில் ஒடிசா மாநிலத்தில் செயல்பட்டு வரும் அனைத்து விதமான பள்ளிகளையும் மீண்டும் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. அந்த வகையில் அக்டோபர் 21ம் தேதி முதல் 8 லிருந்து 11ம் வகுப்புகளுக்காக பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன. மேலும் முறையான கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடிப்பதன் மூலம் பள்ளிகள் மீண்டும் தொடங்கும் என்று அம்மாநில நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் தரிசனம் செல்ல திட்டமிட்டோர் கவனத்திற்கு – இன்று நடைதிறப்பு!
இப்போது அக்டோபர் 21 முதல் 11 ஆம் வகுப்பிற்கான நேரடி வகுப்புகள் தொடங்கும் நிலையில் அக்டோபர் 25ம் தேதி முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகளும் தொடங்க இருக்கிறது. பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் போது வகுப்புகளில் கலந்து கொள்ளும் அனைவரும் முகக்கவசம் அணிவது, கை சுத்திகரிப்பான்களை பயன்படுத்துவது, சமூக இடைவெளியைப் பராமரித்தல் ஆகியவற்றை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் தனம் அண்ணிக்கு பிறந்த ஆண் குழந்தை – மகிழ்ச்சியில் குடும்பத்தினர்!
சமீபத்தில், ஒடிசா பள்ளி மற்றும் வெகுஜன கல்வி அமைச்சர் சமீர் ரஞ்சன் டாஷ் மற்றும் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அவர்கள் வெளியிட்ட கொரோனா தடுப்பு வழிகாட்டுதலுக்குப் பிறகு 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் மீண்டும் தொடங்கியது. அதே நேரத்தில் 1 முதல் 7 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான வகுப்புகளை மீண்டும் தொடங்குவது குறித்து எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை என்று ஒடிசா அமைச்சர் டாஷ் குறிப்பிட்டுள்ளார்.