நாடு முழுவதும் இரவு ஊரடங்கு இன்று முதல் அமல் – இலங்கை அரசு அறிவிப்பு!!
இலங்கையில் கொரோனா மூன்றாம் அலை தாக்கம் காரணமாக இன்று முதல் இரவு நேர முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இரவு ஊரடங்கு அமல்:
இலங்கையில் கொரோனா மூன்றாம் அலை தாக்கம் மிகவும் வேகமாக பரவி வருகிறது. தினசரி பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக பதிவாகி உள்ளது. இதனால் நாடு முழுவதும் கட்டுப்பாடுகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்று முதல் நாடு முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஆவி பிடித்தால் நுரையீரல் தொற்று ஏற்படும் – மருத்துவத்துறை அமைச்சர் எச்சரிக்கை!!
இரவு நேரங்களில் பொதுப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இரவு 11 மணி முதல் காலை 4 மணி வரை வாகனங்கள் எதுவும் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் மே 31 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய தேவைகள் தவிர வேறு எதற்கும் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இதுகுறித்து டிஐஜி கூறுகையில், கொரோனா கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும். நேற்று கட்டுப்பாடுகளை மீறி 262 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு மே 31 வரை நீடிக்கப்பட உள்ளது என தெரிவித்துள்ளார்.