இந்திய மக்களுக்கு ஷாக்.. நாட்டில் அமலாகும் புதிய வரி – அதிரடி முடிவை எடுத்துள்ள மத்திய பிரதேச அரசு!

0
இந்திய மக்களுக்கு ஷாக்.. நாட்டில் அமலாகும் புதிய வரி - அதிரடி முடிவை எடுத்துள்ள மத்திய பிரதேச அரசு!
இந்திய மக்களுக்கு ஷாக்.. நாட்டில் அமலாகும் புதிய வரி - அதிரடி முடிவை எடுத்துள்ள மத்திய பிரதேச அரசு!
இந்திய மக்களுக்கு ஷாக்.. நாட்டில் அமலாகும் புதிய வரி – அதிரடி முடிவை எடுத்துள்ள மத்திய பிரதேச அரசு!

இந்திய நாட்டில் பல மாநிலங்களில் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு வருகின்றன. அதனால் மத்திய பிரதேசத்தில் நாய் வளர்ப்புக்கு முதல் முறையாக வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான கூடுதலான தகவல்களை பார்ப்போம்.

நாய் வளர்ப்பு

இந்திய நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் இதனால் ஏற்படும் பிரச்சனைகளும் அதிகரித்து வருகிறது. அதாவது நாய்கள் பலரையும் கடிப்பதால் உயிரிழப்புகளும் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. அதன் காரணமாக சில மாநகராட்சிகளில் மனித உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய நாய்களை வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

மேலும் பொது இடங்களில் மற்றும் தெருக்களில் நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் உள்ள சாகர் நகராட்சியில் 40 கவுன்சிலர்கள் கலந்து கொண்ட கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் நகராட்சி முழுவதும் பொதுமக்களை நாய்கள் கடிப்பதாகவும் புகார் எழுப்பப்பட்டது.

தமிழகம் முழுவதும் 15,599 சிறப்பு பேருந்துகள்.. மக்கள் மீண்டும் இருப்பிடம் திரும்ப அரசு ஏற்பாடு!

அதனால் பொதுமக்களின் நலன் கருதி, நாட்டிலேயே முதல் முறையாக வளர்ப்பு நாய்களுக்கு வரி விதிக்க கூட்டத்தில் முடிவு செய்துள்ளதாக நகராட்சி தலைவர் அறிவித்துள்ளார். அத்துடன் நகராட்சியில் உள்ள அனைத்து வளர்ப்பு நாய்களும் பதிவு செய்யப்பட்டு, அவற்றிற்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். இந்த வரி விதிப்பு வருகிற ஏப்ரல் மாதம் முதல் அமல்படுத்த வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!