ரயிலில் பயணிக்க கொரோனா தடுப்பூசி கட்டாயம் – தென்மேற்கு ரயில்வே அறிவிப்பு!
இந்தியாவில் மஹாராஷ்டிராவில் இருந்து கர்நாடகாவிற்கு ரயில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என தென்மேற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தடுப்பூசி கட்டாயம் :
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் பல மாநிலம் தோறும் கடும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்குகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மாநில அரசுகள் தடுப்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. மருத்துவ துறையின் முயற்சியால் இந்தியாவில் கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கோவாக்சின், கோவிட்ஷீல்டு, ஸ்புட்னிக் வி போன்ற தடுப்பூசிகள் தற்போது இந்தியாவில் பயன்பாட்டில் உள்ளது.
தமிழக அரசின் குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி – விண்ணப்பங்கள் வரவேற்பு!
கடந்த ஜனவரி மாதம் முதல் நாடு முழுவதும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசிகளை செலுத்தி கொள்ள வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. கொரோனாவுக்கு எதிரான பேராயுதமாக தடுப்பூசிகள் உள்ளது. தற்போது இந்தியாவில் கொரோனா சற்று குறைந்து வருவதால் ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. பேருந்து சேவைகளும் ரயில்களும் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு வழங்கும் ரூ.4,000 நிதி உதவி – விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்!
மேலும் மஹாராஷ்டிராவில் இருந்து கர்நாடகாவிற்கு ரயில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் கட்டாயம் தடுப்பூசி தவணை செலுத்தி இருக்க வேண்டும் என தென்மேற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. அவ்வாறு தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் 72 மணி நேரத்திற்கு மிகாமல் கொரோனா பரிசோதனை செய்த சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. சான்றிதழ் இல்லை எனில் ரயில் பயணம் மேற்கொள்ள அனுமதி கிடையாது எனவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.