மத்திய அரசு வழங்கும் ரூ.4,000 நிதி உதவி – விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்!
மத்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவியை பெற விரும்பும் விவசாயிகள் விண்ணப்பிங்களை செலுத்த இன்று (ஜூன் 30) கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் விவசாயிகள் விரைந்து இந்த சேவைகளை பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நிதியுதவி விண்ணப்பம்
‘பிரதமர் கிசான் சம்மன்’ என்ற திட்டத்தின் கீழ் நலிவடைந்துள்ள விவசாயிகளுக்கு மாதந்தோறும் 2 ஆயிரம் ரூபாய் நிதி உதவியை மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்த உதவித்தொகையானது ஒரு ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் என்ற வீதத்தில் மூன்று தவணைகளாக பிரித்து வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த உதவித்தொகையை பெறும் விவசாயிகளது வங்கி கணக்குகளுக்கு பணமானது நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கிசான் சம்மன் திட்டத்தின் கீழ் இதுவரை 7 தவணை நிதி உதவிகளை விவசாயிகள் பெற்றுள்ளனர்.
ஜூலை 19, 22ம் தேதிகளில் திட்டமிட்டபடி SSLC தேர்வு – முதல்வர் அறிவிப்பு!
மேலும் 8 ஆவது தவணை பணம் வழங்கும் திட்டம் கடந்த மே மாதம் பிரதமர் மோடி அவர்களால் துவங்கி வைக்கப்பட்டு, அவை விவசாயிகளின் வங்கி கணக்குக்கு தற்போது செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இத்திட்டத்தின் கீழ் இதுவரை பதிவு செய்யாத விவசாயிகள் ஜூன் 30 ஆம் தேதிக்குள் பதிவு செய்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த கால அவகாசம் இன்றுடன் முடிவடையவுள்ளதால், இச்சேவைகளை விரைந்து பெற்றுக்கொள்ள விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பட்டியலின மாணவர்களுக்கு ஆண்டுதோறும் ரூ.13,500 வரை ஊக்கத்தொகை – கடைசி நாள்!
அந்த வகையில் 2 ஹெக்டேருக்கும் குறைவான நிலம் கொண்ட விவசாயிகள் இதற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர். மேலும் இதுவரை ஒரு தவணை கூட பணம் பெற்றுக்கொள்ளாத விவசாயிகள், இன்றைக்குள் பதிவு செய்தால் அவர்களுக்கு 8 மற்றும் 9 ஆவது தவணை பணம் சேர்த்து வழங்கப்பட உள்ளது. இதனால் நிதி உதவியுடன் சேர்த்து கூடுதலாக 4 ஆயிரம் பணம் கிடைக்கவும் வாய்ப்புள்ளது. எனவே விவசாயிகளின் வங்கி கணக்கில் ஆதார் சேவைகளை இணைத்து விரைந்து இந்த சலுகைகளை பயன்படுத்திக்கொள்ளலாம்.