TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு, ஆதார் இணைப்பு அவசியம் – பிப். 28ம் தேதி கடைசி நாள்!
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வர்கள் ஒரு முறை நிரந்தர பதிவு செய்திருப்பின் அவர்களின் ஆதாரை பிப்ரவரி 28ம் தேதிக்குள் இணைக்க வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆதார் இணைப்பு:
தமிழக அரசின் அனைத்து துறைகளுக்கும் தேவையான பணியாளர்கள் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் தேர்வுகளின் மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள். பணி நிலைகளுக்கு ஏற்ப தனித்தனியாக தேர்வுகள் நடத்தப்பட்டு அதன் பின்னர், நேர்காணல் போன்ற செயல்முறைகள் மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதனால் TNPSC தேர்வுகள் குறித்து அரசு கவனமாக பல அறிவுறுத்தல்களை வெளியிட்டு வருகிறது.
TN Job “FB Group” Join Now
சமீபத்தில் தான் தமிழகத்தில் தமிழ் மக்களுக்கு அரசு பணிகளில் அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தமிழ் மொழி மட்டுமே மொழி பிரிவில் வைக்கப்பட்டுள்ளது. தமிழ்மொழிப் பிரிவு வினாக்களில் தேர்ச்சி பெற்றவர்களின் விடைத்தாள்கள் மட்டுமே அடுத்த பகுதிக்கு மதிப்பிடப்படும். சில வருடங்களுக்கு முன்னதாக TNPSC தேர்வர்கள் ஒரு முறை நிரந்தரப்பதிவு முறை அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர்கிரண் குராலா அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, TNPSC தேர்வுகளில் காலத்திற்கு தேவையான மாற்றங்களை அரசு செய்து வருகிறது. தேர்வுகளில் வெளிப்படைத்தன்மை, நம்பகத் தன்மை மற்றும் தேர்வு முறைகளில் எளிமை போன்ற பல சீர்திருத்தங்களை செய்து வருகிறது. TNPSC இணையதளத்தில் ஒரு முறை நிரந்தரப் பதிவு கணக்கு வைத்திருக்கும் நபர்கள் தங்களது ஆதார் எண்ணை வரும் பிப்ரவரி 28ம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்றும், இனி வரும் காலங்களில் TNPSC அறிவிக்கும் தேர்வுகளுக்கு அதன் மூலமே விண்ணப்பித்து கொள்ள வேண்டுமென்றும் தெரிவித்துள்ளார்.