புதுக்கோட்டை சமூக பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது
தமிழக சமூக பாதுகாப்புத் துறையின் கீழ் உள்ள புதுக்கோட்டை மாவட்ட அலுவலகத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது வெளியான அறிவிப்பின்படி Social Worker Member பதவிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வமுள்ளவர்கள் இதன் மூலம் பயனடையலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | தமிழக சமூக பாதுகாப்புத் துறை |
பணியின் பெயர் | Social Worker Member |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 10.12.2021 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
பணியிடங்கள்:
தமிழக சமூக பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Social Worker Member பதவிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்படவுள்ளது.
வயது வரம்பு:
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 35 என்றும் அதிகபட்சம் 65 என்றும் இருக்க வேண்டும். 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
சமூக பாதுகாப்பு துறை கல்வித்தகுதி :
- Child Psychology/ Psychiatry/ Law/ Social Work/ Sociology/ Human Development பாடங்களில் UG பட்டம் முடித்திருக்க வேண்டும்.
- மேலும் பணியில் 7 ஆண்டுகளுக்கும் அதிகமான அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பெற்று 10.12.2021 ம் தேதிக்கு முன் அனுப்புமாறு தெரிவிக்கப்படுகிறது. அதன்பின் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
முகவரி:- மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு, முன்னாள் படைவீரர் நல அலுவலக வளாகம், கல்யாணராமபுரம் 1வது தெரு, திருகோகர்ணம் – அஞ்சல், புதுக்கோட்டை மாவட்டம் – 622 002