Axis வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – இன்று முதல் கட்டணம் அதிகரிப்பு!
ஆக்சிஸ் வங்கியானது தனது வங்கி எஸ்எம்எஸ் கட்டணம் மற்றும் மினிமம் பேலன்ஸ் தொகையை அதிகரித்துள்ளது. இந்த கட்டண அதிகரிப்பு இன்று (ஜூலை 1) முதல் அமலுக்கு வந்துள்ளது.
ஆக்சிஸ் வங்கி:
தனியார் துறை வங்கியான ஆக்சிஸ் வங்கி கடந்த மே மாதத்தில் தனது வங்கியின் கட்டண சேவையை திருத்தி கட்டணங்களை அதிகரித்தது. இந்த புதிய கட்டண விதிகள் இன்று (ஜூலை 1) முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகையாக ரூ.15,000 வைத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பு குறைந்தபட்ச வரம்பு ரூ.10,000 ஆக இருந்த நிலையில் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலை ஆன்லைன் செமஸ்டர் தேர்வுகள் – புதிய கட்டுப்பாடுகள்!
அதேபோல் பிரைம் மற்றும் லிபர்டி சேவிங் கணக்கு வைத்திருப்போருக்கு குறைந்தபட்ச இருப்பு தொகை ரூ.15,000ல் இருந்து ரூ.25,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. தங்கள் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையில் இருந்து குறையும் ஒவ்வொரு ரூ.100 க்கும் ரூ.10 அபராதம் விதிக்கப்படும். சராசரி பேலன்ஸ் ரூ.5,000 மற்றும் ரூ.7,500க்கு கீழ் இருந்தால் வங்கி உங்களுக்கு ரூ.800+வரி விகிதம் கட்டணமாக வசூலிக்கும். மேலும் மினிமம் பேலன்ஸ் தொகை இல்லையெனில் அதற்கு விதிக்கப்படும் குறைந்தபட்ச கட்டண தொகை ரூ.50 மற்றும் அதிகபட்ச கட்டண தொகை ரூ.800 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும் ஆக்சிஸ் வங்கி வாடிக்கையாளர்கள் ஒரு மாதத்திற்கு 4 முறைக்கு மேல் வங்கிகள் மூலமாகவோ அல்லது ஏடிஎம் மூலமாகவோ பணம் எடுத்தால் ரூ.10 கட்டணம் வசூலிக்கப்படும். அதிகபட்சமாக ரூ.150 வரை கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு கட்டணம் ரூ.5 ஆக இருந்த நிலையில் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் எஸ்எம்எஸ் அலர்ட்டுக்காக மாதம் 5 பைசா வீதம் ஆண்டுக்கு ரூ.15 வசூலிக்கப்பட்ட நிலையில் தற்போது மாதத்துக்கு 25 பைசாவாக அதிகரித்து ஆண்டுக்கு ரூ.25 வரை வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.