அண்ணா பல்கலை ஆன்லைன் செமஸ்டர் தேர்வுகள் – புதிய கட்டுப்பாடுகள்!
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளில் ஆன்லைன் தேர்வுகளில் பல்வேறு குளறுபடிகள் நடந்ததால் தேர்வு நேரத்தில் பேராசிரியர்கள், கல்லுாரிகளில் பணியில் இருக்க வேண்டும் என பல்கலை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
ஆன்லைன் தேர்வுகள்
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகளும், தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடத்தப்பட்ட தேர்வுகளில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார் வந்தது.
ஆகஸ்ட் 1 வரை முழு ஊரடங்கு உத்தரவு அமல் – மாநில அரசு அறிவிப்பு!
இதனால் மறுதேர்வு நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த தேர்வுகள் ஜூன் 21 ஆம் தேதி தொடங்கப்பட்டு ஜூலை 14 வரை நடைபெற உள்ளது. இது குறித்து பல்கலையின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெங்கடேசன், அண்ணா பல்கலையின் நேரடி கல்லுாரிகள், வளாக கல்லுாரிகள் மற்றும் தன்னாட்சி அல்லாத இணைப்பு கல்லுாரிகளுக்கு, சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
TN Job “FB Group” Join Now
அதில், வழக்கமாக ஆன்லைன் மூலமாக 3 மணி நேரம் எழுத்துத் தேர்வு நடத்தப்படுகிறது. அதன்பின் ஆன்லைனில் விடைத்தாள் பிரதியை அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது செமஸ்டர் தேர்வு நடந்து வரும் நிலையில், தேர்வு பணியில் உள்ள பேராசிரியர்கள், தேர்வில் முறைகேடுகள் ஏற்படாமல் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். தேர்வு நேரத்தில் பேராசிரியர்கள், அவரவர்க்கு ஒதுக்கப்பட்ட கல்லுாரிகளில், கட்டாயம் பணியில் இருக்க வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.