தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் – சுகாதாரத்துறை செயலாளர்!
தமிழகத்தில் அளவு, இடவசதி இல்லாத பள்ளிகளில் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்துவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சுழற்சி முறையில் வகுப்புகள்:
தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலையின் பாதிப்புகள் குறைந்த நிலையில் அரசு இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்று கிழமைகளில் விதிக்கப்பட்ட முழு ஊரடங்கை ரத்து செய்துள்ளது. மேலும் 1 – 12ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்கவும் அரசு அனுமதி வழங்கியது. இதனையடுத்து பிப்ரவரி 1 முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வருகை தர வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது. அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இன்று தமிழகத்தில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளும் திறக்கப்பட்டுள்ளது.
Reliance Jio 84 நாட்கள் வேலிடிட்டியுடன் கூடிய சூப்பர் ரீசார்ஜ் திட்டங்கள் – முழு விபரம் இதோ!
கொரோனா தொற்று முழுமையாக குறையாமல் உள்ளதால் 15 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் கட்டாயம் தடுப்பூசிகளை செலுத்தி கொண்டு பள்ளிக்கு வருகை புரிய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் வகுப்பறைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் போதிய இடவசதி இல்லாத பள்ளிகளில் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்துவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி 5ம் தேதி 1 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் மீண்டும் திறப்பு – மாநில முதல்வர் அறிவிப்பு!
தற்போதைய தொற்று பரவல் சூழ்நிலையில் மாணவர்கள் தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது அவசியமாகும். அதனால் இடவசதி இல்லாத பள்ளிகளில் 3 நாட்கள் கழித்து, தேவைப்பட்டால் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்தலாம். மேலும் நோய் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என்றும் அடுத்த 2 வாரம் கவனக்குறைவாக இருக்க கூடாது முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை ,மொத்தம் 33.46 லட்சம் மாணவர்கள் இலக்கு உள்ள நிலையில் 77% பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.