சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலை மாணவர் சேர்க்கை – ஜூலை 30 கடைசி நாள்!!
தஞ்சாவூர் மாவட்டம் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைகழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை 2021 ஆம் ஆண்டுக்கான கொள்கை திருத்தி அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகம் அறிவிப்பு:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கல்லூரிகள் திறக்கப்படவில்லை. ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்படுகிறது. மேலும் பள்ளிகளில் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்த சிரமம் ஏற்பட்டுள்ளது. பல கல்லூரிகள் வழக்கமாக நடைமுறையில் உள்ள அட்மிஷன் வழிமுறைகளில் மாற்றம் அறிவித்துள்ளது.
அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (DA) அதிகரிப்பு – வல்லுநர்கள் விளக்கம்!
தஞ்சாவூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைகழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் 2021 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான கொள்கை திருத்தி அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இது குறித்த அறிவிப்பை அந்த பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ். வைத்திய சுப்பிரமணியன் வெளியிட்டுள்ளார்.
திருத்தியமைக்கப்பட்ட கொள்கை அடிப்படையில், பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை 50 சதவிகிதம் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும். மீதமுள்ள 50 சதவிகிதம் ஜே.இ.இ முதன்மை தேர்வு அடிப்படையில் கணக்கீடு செய்து சேர்க்கை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகம் சார்பில் எந்த நுழைவுத் தேர்வும் நடத்தப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளிவந்த பின்னர், மாணவர்கள் தங்களது விண்ணப்பங்களை ஜூலை 31 ஆம் தேதி வரை இணையதளம் மூலமாக அனுப்ப வேண்டும். அதன் பின்னர் அதே நாளில் இரவு 9 மணிக்கு தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 2 ஆம் தேதி நடைபெற உள்ளது. மாணவர் சேர்க்கையில் தஞ்சாவூர், திருச்சி மாணவர்களுக்கு 30 சதவிகிதம் ஒதுக்கீடு செய்யப்படும். இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு https://www.sastra.edu/ என்ற இணையதளத்தை பார்வையிடலாம்.
Arts and sciences ku epo