அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (DA) அதிகரிப்பு – வல்லுநர்கள் விளக்கம்!
மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (DA) மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான DR ஜூலை முதல் உயர்த்தப்படும் என மத்திய அரசு அறிவித்த பின்னர், பணியாளர்கள் மத்தியில் DA பேசுபொருளாக மாறியுள்ளது.
DA உயர்வு
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கான DA மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான DR ஜூலை மாதம் முதல் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த உயர்வு மூலம் 52 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களுக்கான நிறுத்தப்பட்ட 3 தவணை DA உயர்வு கொடுக்கப்படுவதில் சிக்கல்கள் எழுந்துள்ளது.
பெங்களூரு ஐஐஎஸ்சி முதலிடம் – சிறந்த ஆராய்ச்சி பல்கலை தரவரிசை பட்டியல்!!
அந்த வகையில் DA மறுசீரமைப்பு மற்றும் மத்திய அரசு ஊழியர்களின் 7 வது CBC ஊதிய மேட்ரிக்ஸில் குறித்து பேசிய JCM தேசிய கவுன்சில் செயலாளர் சிவா கோபால் மிஸ்ரா, ‘DA மறுசீரமைப்பிற்குப் பிறகு, மத்திய அரசு ஊழியரின் DA உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் 7 ஆவது ஊதியக்குழுவை அமல்படுத்தும்போது 2.57 ஆக நிர்ணயிக்கப்பட்ட CBC பொருத்துதல் காரணி மூலம், ஒரு ஊழியருக்கு 17 சதவீதம் முதல் குறைந்தது 28 சதவீதம் வரை கிராஜூவிட்டி உயரும்.
அதன் படி ஒரு அரசு ஊழியரின் மாதாந்திர அடிப்படை சம்பளம் ₹ 20,000 என்றால், மாதாந்திர அடிப்படை ஊதியம், 4 ,51,400 ஆக அதிகரிக்கும். அதன் பிறகு DA, மருத்துவ செலவினம் போன்றவை கணக்கிடப்படும். பிறகு அடிப்படை மாத ஊதியம் மற்றும் மொத்த கொடுப்பனவு ஒரு ஊழியரின் மொத்த மாத ஊதியத்தை தீர்மானிக்கும். இது குறித்து டிரான்ஸென்ட் கன்சல்டன்ஸின் மேலாண்மை நிறுவனத்தின் இயக்குனர் கார்த்திக் ஜாவேரி கூறுகையில், ஒருவரின் அடிப்படை சம்பளம் மற்றும் DA மூலம் மாதாந்திர PF தீர்மானிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
JCM தேசிய கவுன்சிலின் மிஸ்ரா கூறுகையில், ஒரு ஊழியரின் அடிப்படை ஊதியத்தை தீர்மானிக்க 7 வது CBC பொருத்துதல் காரணி உதவுகிறது. ஒரு மத்திய அரசு ஊழியரின் மொத்த மாத சம்பளத்தில் அவரது அடிப்படை சம்பளம் 50 சதவீதமாக இருக்கும். எனவே 20,000 அடிப்படை மாத சம்பளம் பெறும் ஒரு மத்திய அரசு ஊழியரின் மொத்த மாத சம்பளம் 1,02,800 ஆக உள்ளது. அதற்குப் பிறகு மாதாந்திர PF பங்களிப்பு, வருமான வரி போன்றவை கழிக்கப்பட்டு, பின்னர் நிகர மாத செலுத்த வேண்டிய தொகை ஒரு மத்திய அரசு ஊழியரின் நிகர வீட்டு சம்பளம் என்று அழைக்கப்படுகிறது.