விவாகரத்து வதந்திகளுக்கு மத்தியில் செம்பருத்தி “ஷபானா” வெளியிட்ட புகைப்படம் – குவியும் லைக்குகள்!
ஜீ தமிழ் செம்பருத்தி சீரியல் மூலமாக அறிமுகமானவர் நடிகை ஷபானா. அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு அதில் தனது வாழ்க்கை முன்னேற்றத்திற்காக கேப்சன் ஒன்றை பதிவிட்டு இருக்கிறார்.
நடிகை ஷபானா:
தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த ஒரு சீரியலாக பல எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகும் சீரியல் தான் ஜீ தமிழ் செம்பருத்தி சீரியல். இந்த சீரியலில் நடிப்பதன் மூலம் நடிகை ஷபானா தமிழ் ரசிகர்களின் மனதில் தனக்கென தனி இடம் பிடித்து இருக்கிறார். அவர் விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் செழியன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஆர்யன் என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தார். இந்த அழகான ஜோடி குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.
பொங்கல் சீரை வைத்து சண்டையிடும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மீனா & ஐஷு – அடுத்தடுத்த திருப்பங்கள்!
இந்நிலையில் இருவரும் கடந்த நவம்பர் மாதம் 11 ஆம் தேதி நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்து பல நிகழ்ச்சிகளில் இருவரையும் ஒன்றாக பார்க்க முடிந்தது. அதன் தேனிலவுக்கு பாண்டிசேரி வந்த இந்த ஜோடி பல புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டார். மேலும் அங்கே ஆர்யனின் பிறந்தநாளுக்கு கொட்டும் மழையில் சப்ரைஸ் செய்தார். இருவருக்கும் திருமணம் முடிந்து ஒரே மாதத்தில் விவாகரத்து நடைபெற இருப்பதாக பல வதந்திகள் பரவியது.
விஜய் டிவியில் “ஈரமான ரோஜாவே” சீசன் 2 சீரியல் – இன்று முதல் ஒளிபரப்பு!
ஆனால் அது பற்றி இந்த ஜோடி எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. அவர்கள் விருப்பப்படி அவர்களது வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் ஷபானா இரண்டாம் மாத திருமண நாள் அன்று வாழ்த்து சொல்லி ஆர்யன் ஒரு பதிவை வெளியிட்டார். அதனால் அவர்களது விவாகரத்து குறித்த முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. மேலும் தனது திருமண வாழ்க்கை குறித்து வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அதனை தொடர்ந்து தற்போது இன்ஸ்டாவில் அவருடைய புகைப்படம் ஒன்றை பதிவிட்டு அதில் மோட்டிவேட் செய்வது போல கேப்சன் கொடுத்திருக்கிறார். அதை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.