SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – சேவை கட்டணம் அதிகரிப்பு!
எஸ்பிஐ வங்கியானது அடிப்படை சேமிப்பு வங்கி வைப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் சேவை கட்டணத்தை அதிகரித்துள்ளது. புதிய சேவை கட்டணம் வருகிற ஜூலை 1முதல் அமலுக்கு வரவுள்ளது.
எஸ்பிஐ:
எஸ்பிஐ வங்கியானது வரும் ஜூலை 1ம் தேதி முதல் புதிய கட்டண சேவையை நடைமுறைப்படுத்த உள்ளது. இந்த புதிய கட்டண சேவை, சேமிப்பு வங்கி வைப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு பொருந்து. அதன்படி ஏடிஎம் மற்றும் வங்கி கிளைகளில் இருந்து பணம் எடுப்பதற்கு சேவை கட்டணங்களை நிறுத்தியுள்ளது. புதிய கட்டணங்கள் காசோலை புத்தகம், பரிமாற்றம் மற்றும் பிற நிதி சாரதா பரிவர்த்தனைக்கு பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 15 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!
அதன்படி ஜூலை 1 2021, முதல் ஏடிஎம் அல்லது வங்கி கிளைகள் மூலம் மாதத்திற்கு 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. 4 முறைக்கு மேல் பணம் எடுக்கும் போது ரூ.15 கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும். அதேபோல் ஆண்டுக்கு 10 காசோலை மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும் அதற்கு மேல் பயன்படுத்தினால் கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
10 தாள் அடங்கிய காசோலை வேண்டும் எனில் அதற்கு ரூ.40 மற்றும் ஜிஎஸ்டி கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் 25 தாள் அடங்கிய காசோலை வேண்டும் எனில் அதற்கு ரூ.75 மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் எஸ்பிஐ மற்றும் எஸ்பிஐ அல்லாத வங்கி கிளைகளில் பி.எஸ்.பி.டி கணக்கு வைத்திருப்பவர்களால் நிதி அல்லாத பரிவர்த்தனைக்கு எந்த கட்டணமும் இருக்காது என்று எஸ்பிஐ அறிவித்துள்ளது.
சேவை சரியில்ல
பணத்துக்கு பாதுகாவலும் சரியில்ல
எதுக்கு இந்த வங்கி அரசுக்கு பார்மா??