முதுநிலை ஆசிரியர்களுக்கு தேர்தல் பணிகளில் விலக்கு – ஆசிரியர் கழகம் கோரிக்கை!!
தேர்தல் பணி:
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடப்பு ஆண்டில் ஏப்ரல் மாதத்தில் நடக்க உள்ளது. பொதுவாக தேர்தல் பணிகளில் தமிழக அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். ஓட்டுச்சாவடி ஊழியர்களாகவும், தேர்தல் பணியாளர்களாகவும் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். இதற்காக இவர்களுக்கு தனியாக ஊதியம் வழங்கப்படும்.
தமிழகத்தின் 69% இட ஒதுக்கீடு குறித்த வழக்கு – உச்சநீதிமன்றம் தீர்ப்பு!!
கோரிக்கை:
மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகனிடம் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட செயலாளர் சந்திரன் அவர்களின் தலைமையில் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அதில், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வை முன்னிட்டு கூடுதல் வகுப்புக்கள் நடத்தப்பட உள்ளது. பொதுத்தேர்வை முன்னிட்டு தேர்தல் பணிகளில் முதுநிலை ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்.
நோய்ப்பரவல் உள்ளதால் 55 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கும் தேர்தல் பணிகளில் விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரியுள்ளனர். மேலும், ஆசிரியர்கள் தங்கள் ஓட்டுக்களை தபால் முறையில் செலுத்த ஏற்பாடுகள் செய்ய வேண்டும். ஆசிரியர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய போதிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றும், ஆசிரியர்களின் இருப்பிடத்திற்கு அருகிலேயே தேர்தல் பணிக்கான இடங்களை ஒதுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்