அடுத்த கல்வியாண்டில் கல்லூரிகளில் விடுமுறையின்றி செமஸ்டர் தேர்வு
அடுத்த கல்வியாண்டில் காலை மாலை என இரு வேலைகளிலும் விடுமுறையின்றி செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
மே 3 வரை ஊரடங்கு இருக்கும் என்பதால் கல்லூரிகள் மற்றும் பல்கலையில் நடக்க விருந்த தேர்வுகள் எல்லாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இந்த கல்வியாண்டு முடிவடைந்து விடும் என்பதால் அடுத்த கல்வியாண்டின் தொடக்கத்தில் தேர்வுகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதனால் கால விரையம் ஏற்படுவதை தவிர்க்க தேர்வுகள் விடுமுறையின்றி நடத்தப்பட இருக்கிறது.
அதற்கு தயாராகும் வகையில் மாவரைகள் இந்த விடுமுறைக் காலத்தினை நன்கு பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |