சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கை – இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்!

0
சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கை - இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்!

தமிழகத்தில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் மதுரை முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம்:

தமிழகத்தில் கடந்த 2009 ஜூன் 1-ம் தேதிக்கு பின் இடைநிலை ஆசிரியர் பணிக்கு என காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட்டது. அவ்வாறு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு கடைநிலை ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் ரூ.5,200 வழங்கப்படும் என நிர்ணயிக்கப்பட்டது. 13 ஆண்டுகளாக இந்த ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. 2009க்கு முன் பணிக்கு சேர்ந்தவர்களுக்கு ரூ.8,370 அடிப்படை ஊதியம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வங்கி பணியில் சேர வேண்டுமா? – என்ன செய்யணும் தெரிஞ்சுக்கோங்க!

கல்வித்தகுதி மற்றும் பணிச்சுமை என அனைத்தும் ஒரே விதமாக இருந்தும் ஊதியத்தில் வேறுபாடு வழங்கப்படுகிறது என குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இது குறித்து பல்வேறு போராட்டங்கள் மேற்கொள்ளப்படும் தீர்வு கிடைக்கவில்லை. இந்நிலையில் சமவேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் மதுரை முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Follow our Twitter Page for More Latest News Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!