ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர ஊர்திகளுக்கு வழி விட மறுத்தால் வழங்கப்படும் அபராதம் குறித்த சிறு தொகுப்பை கீழே காண்போம்.
அபராதம்:
சென்னை,டெல்லி,மும்பை, பெங்களூரு போன்ற இந்திய மாநகரங்கள் ஒவ்வொன்றிலுமே போக்குவரத்து நெருக்கடி என்பது இன்றளவும் தீராத ஒரு பிரச்சினையாய் உள்ளது. பெரும்பாலான சாலைகளில் போக்குவரத்து நெரிசலில் நாம் எப்போதும் காண்கிறோம். மெட்ரோ நகரங்களில் போக்குவரத்து நெரிசலுக்கு எப்போதும் பஞ்சமே கிடையாது. அப்படிப்பட்ட போக்குவரத்து நெரிசலின் போது ஆம்புலன்ஸ் .தீயணைப்பு வாகனங்கள் போன்ற அவசர ஊர்திகளுக்கு கூட சில சமயங்களில் வழி கிடைக்காமல் போகிறது.
வங்கி பணியில் சேர வேண்டுமா? – என்ன செய்யணும் தெரிஞ்சுக்கோங்க!
சைரன் ஒலியை காதில் வாங்கிக் கொள்ளாமல் தொடர்ந்து வாகனத்தை இயக்குபவர்கள் இன்றளவும் இருந்து கொண்டே தான் இருக்கின்றனர். இது போன்ற விதி மீறல்களை கட்டுப்படுத்தவும் அவசர சேவைகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யவும் இந்திய நகரம் மிக கடுமையான நடவடிக்கையை எடுத்து வருகிறது. நகரில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் போன்ற அவசர ஊர்திகளுக்கு வழி விடவில்லை என்றால் ரூபாய் 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகின்றது. சாலையோரங்களில் வைக்கப்படும் சிசிடிவி கேமராக்கள் மூலம் இந்த குற்றங்கள் உறுதி செய்யப்பட்டு அதன் பின்னர் அபராதங்கள் விதிக்கப்படுகின்றன.