நீட் UG தேர்வு முடிவுகள் 2021 – விரைவில் ஸ்கோர் கார்டு வெளியீடு! மாணவர்கள் எதிர்பார்ப்பு!
நாடு முழுவதும் கடந்த செப்டம்பர் 12ம் தேதி நடைபெற்ற 2021 நீட் தேர்வு முடிவுகள் விரைவில் என்டிஏ தளத்தில் வெளியிடப்படவுள்ளது. நீட் தேர்வின் பைனல் ஆன்சர் கீ வெளியான சில மணி நேரத்தில், தேர்வு முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீட் தேர்வு:
இந்தியாவில் பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் போன்ற மருத்துவ படிப்புகளில் சேர நீட் எனும் மத்திய அரசின் நுழைவுத்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வருடம் தோறும் 12 ம் மதிப்பெண்கள் வெளியானதும் இந்தியா முழுவதும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு மத்திய அரசின் கண்காணிப்பில் நீட் தேர்வு நடைபெற்றது. கடந்த ஜூலை மாதம் முதல் நீட் தேர்வு விண்ணப்பதிவு தொடங்கி ஆகஸ்ட் 14 ம் தேதி நீட் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பித்தனர்.
தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? முக்கிய வலியுறுத்தல்!
கடந்த செப்டம்பர் மாதம் 12ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. சுமார் 16 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். கேள்வித்தாள் மற்றும் விடைத்தாள் சீரியல் மாற்றத்தால் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட மும்பை உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இந்த உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததை அடுத்து விரைவில் நீட் தேர்வு முடிவை வெளியிட உத்தரவிட்டது. இதையடுத்து நீட் தேர்வு முடிகளை எதிர்பார்த்து மாணவர்கள் காத்திருக்கின்றனர்.
தமிழக அரசின் நிவாரணத் தொகை ரூ.5,000 இல் இருந்து ரூ.6000 ஆக உயர்வு – முதல்வர் உத்தரவு!
2021 தேர்வு முடிவுகள் விரைவில் என்டிஏ தளத்தில் வெளியிடப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. நீட் தேர்வின் பைனல் ஆன்சர் கீ வெளியான சில மணி நேரத்தில், தேர்வு முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாணவர்கள் ஒரே மதிப்பெண் எடுக்கும் பட்சத்தில், அவர்களை தரவரிசைப்படுத்த டை பிரேக்கிங் பார்முலா பின்பற்றப்பட்டு வந்தது இந்தாண்டு டை பிரேக்கிங்கில் விண்ணப்பதாரரின் வயது நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.