1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு திங்கள் முதல் பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!
இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மீண்டும் பள்ளிகள் திறப்பதற்கான தகவல்கள் வெளியாகியுள்ளது.
பள்ளி திறப்பு
இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றின் 3ம் அலை வேகமாக பரவி வருகிறது. அத்துடன் ஓமைக்ரான் வைரஸ் தொற்று பரவலும் வேகமாக பரவி வருகிறது. இதனை தொடர்ந்து தொற்று பரவலை கட்டுப்படுத்த தேவைப்பட்டால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி கொள்ளலாம் என்று மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. இதில் குறிப்பாக மாணவர்களின் நலன் கருதி 1 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. இதையடுத்து கல்லூரி மாணவர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
Post Office தினசரி ரூ.95 முதலீடு, ரூ.14 லட்சம் வரை ரிட்டன்ஸ் – சூப்பர் இன்சூரன்ஸ் திட்டம்!
தற்போது மீண்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் குழந்தைகளின் கற்றல் திறன் பாதிக்கப்படுவதாக பெற்றோர் மத்தியில் கவலைகள் எழுந்துள்ளது. மேலும் இவ்வாறு தொடர்ந்து மாத கணக்கில் விடுமுறை அளிக்கப்படுவதால் மாணவர்களின் கல்வி இடைநிற்றலும் நாடுமுழுவதும் அதிகரித்துள்ளதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனா பரவல் காரணமாக பள்ளிகளை மூடுவதில் நியாயமில்லை என்று உலக வங்கி கல்வி இயக்குனர் ஜெய்ம் சாவேத்ரா கருத்து தெரிவித்துள்ளார்.
குறைந்த வட்டியில் SBI தங்க நகைக்கடன் – விண்ணப்பிப்பது எப்படி? முழு விபரம் இதோ!
மேலும் உணவகங்கள், பார்கள் மற்றும் வணிக வளாகங்களை திறந்து வைத்து உள்ள நிலையில் பள்ளிகளை மூடி வைப்பது மிகவும் அர்த்தமற்றதாக உள்ளது. இவ்வாறு குழந்தைகளின் கற்றல் திறன் குறைந்து கொண்டே வருவதால் மீண்டும் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில் மகாராஷ்டிராவில் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 24ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அம்மாநில கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்துடன் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.