தமிழகத்தில் 6 முதல் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு குறித்த முக்கிய அறிவிப்பு – வழிகாட்டுதல்கள் வெளியீடு?
தமிழகத்தில் உள்ள அனைத்து வகையான பள்ளிகளிலும் 6 முதல் 12 வரையுள்ள வகுப்புகளுக்கு ஜனவரி 3ம் தேதி முதல் முழுமையான விதத்தில் வகுப்புகள் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
பள்ளிகள் திறப்பு
மாநிலம் முழுவதும் கொரோனா 2ம் அலைத்தொற்று ஓய்ந்திருக்க கூடிய சூழலில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு மட்டும் ஜனவரி 3 முதல் சுழற்சி முறையில் வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு, வழக்கம் போல பள்ளிகள் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் பள்ளிகளை திறக்கும் இந்த முடிவு, முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கொரோனா ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு எடுக்கப்பட்டுள்ளது.
TNPSC குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு – மார்ச் மாதத்தில் முதன்மை தேர்வு!
இப்போது கொரோனா நோய் தொற்று பரவலுக்கு மத்தியில் மாணவர்கள் எதிர்கொண்டு வரும் கற்றல் இழப்பை சரி செய்வதற்காக வகுப்புகள் அனைத்தும் முழுமையாக திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் பள்ளிகளை முழுமையாக திறப்பது குறித்த அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல்களுக்காக பள்ளிகள் காத்திருக்கின்றன. அந்த வகையில் மாணவர்களின் வருகை கட்டாயமாக்கப்படாது என்றும் பள்ளிகள் கலப்பின முறையை பின்பற்றும் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – 18 மாத DA நிலுவைத்தொகை விரைவில்! பிரதமர் முடிவு!
முன்னதாக, தமிழகத்தில் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டபோது சில வழிகாட்டுதல் நெறிமுறைகள் அரசால் வெளியிடப்பட்டு, பின்பற்றப்பட்டு வந்தன. ஆனால் தற்போது, வரும் ஜன.3ம் தேதியன்று முழுமையான வகுப்புகள் நடத்தப்பட இருக்கும் நிலையில் அனைத்து மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளை அரசு மாற்றியமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.