அரசு பள்ளிகளில் மதிய உணவு மற்றும் புதிய சிறப்பு திட்டம் அமல் – கல்வித்துறை ஏற்பாடு!
கர்நாடகா மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகள் மே 31ம் தேதி அதிகாரபூர்வமாக திறக்கப்படும் என்று கல்வித்துறை அறிந்துள்ளது. மேலும், பள்ளிகள் திறக்கப்படும் சமயத்தில் புதிய திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
புதிய திட்டங்கள்:
கர்நாடகா மாநிலத்தில் கடந்த கல்வி ஆண்டுக்கான இறுதி தேர்வுகள் அனைத்தும் நடத்தி முடிக்கப்பட்டு, மாணவர்களுக்கு கோடை கால விடுமுறை அளிக்கப்பட்டது. 49 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு, பள்ளிகள் மே 29ம் தேதி தொடங்கும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டது, ஆனால் கோடை வெப்பத்தின் காரணமாக 2 நாட்கள் தள்ளிவைக்கப்பட்டு மே 31ம் தேதி பள்ளிகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் இந்த கல்வியாண்டில் அரசு பள்ளிகள் செய்த புதிய சாதனை – வெளியான முக்கிய தகவல்!
முன்னதாக அறிவிக்கப்பட்ட 29ம் தேதி மாணவர்கள் கட்டாயமின்றி பள்ளிகளுக்கு அழைக்கப்பட்டு, பாடங்களை தவிர்த்து பாடல், நடனம் மற்றும் அறிமுக படலங்கள் போன்ற செயல்கள் நடந்தது. இந்நிலையில், நாளை முதல் அதிகார்பூர்வமாக பள்ளிகள் திறக்கப்பட்டு, வகுப்புகள் தொடங்க உள்ளதால் ஆசிரியர்கள் அதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
Exams Daily Mobile App Download