ஜூலை 16ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு – கல்வி அமைச்சர் உறுதி!
புதுச்சேரியில் பாஜக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில், கட்சி நிர்வாகிகளிடம் உள்துறை அமைச்சர் குறைகள் குறித்து கேட்டறிந்தார்.
ஆலோசனை கூட்டம்:
புதுச்சேரியில் கொரோனா பாதிப்புகள் குறைந்து தற்போது இயல்பு நிலை திரும்பி வருவதால் அங்கு மீண்டும் பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து அரசு முன்னதாக அறிவித்துள்ளது. புதுச்சேரியை தொடர்ந்து தமிழகத்திலும் பள்ளிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் புதுவை அமைச்சர் ஏ.நமச்சிவாயம் தலைமையில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.
தமிழகத்தில் சட்டப் படிப்புகளுக்கான ஆன்லைன் செமஸ்டர் தேர்வு – அறிவிப்பு வெளியீடு!
இந்த ஆலோசனை கூட்டத்தில் கட்சி நிர்வாகிகளிடம் பொதுமக்களின் குறைகளை கேட்டு அறிந்தார். அதன் பின்னர், செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது, பாஜக தலைமை அளித்த உத்தரவு போல், கட்சியின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் கோரிக்கைகளை அறிந்து கொள்வதாக கூறினார். மேலும் கட்சியின் மாணவர் அமைப்பினர் பள்ளி, கல்லூரிகள் தொடர்பாக பல கோரிக்கைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இது தொடர்பாக அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் முடிவு எடுக்கப்படும். மேலும், ஜூலை 16ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்க இருக்கும் நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அரசு, மாணவர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை அறிவிக்கும். மாணவர் அமைப்பினர் தமிழகத்தில் ஆன்லைன் தேர்வு நடத்தியது போல் புதுவையிலும் நடத்துவதற்கு வலியுறுத்துகின்றனர். காவலர் தேர்வுகள் குறித்து விரைவில் அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று அமைச்சர் அறிவித்துள்ளார்.