தமிழகத்தில் சட்டப் படிப்புகளுக்கான ஆன்லைன் செமஸ்டர் தேர்வு – அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் ஜூலை, செப்டம்பர் மாதங்களில் சட்டப்படிப்புக்கான தேர்வுகள் ஆன்லைன் மூலமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வுகள் அறிவிப்பு:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் கல்லூரிகளில் பருவத் தேர்வுகளும் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டது. இந்நிலையில் கொரோனா பரவல் குறைவாக உள்ள காரணத்தால் பள்ளி, கல்லூரிகள் திறக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் தேர்வுகள் நடத்த வேண்டும் – AICTE வலியுறுத்தல்!
தமிழகத்தில் மொத்தம் 14 அரசு சட்டக் கல்லூரிகள் டாக்டர் அம்பேத்கார் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. சென்னை – புதுபாக்கம் மற்றும் பட்டரை பெரும்புதூர், சென்னை சீர்மிகு சட்டக் கல்லூரி, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கோயம்புத்தூர், செங்கல்பட்டு, வேலூர், விழுப்புரம், தருமபுரி, இராமநாதபுரம், தேனி ஆகிய பகுதிகளில் சட்ட கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றனர். அவை அனைத்தும் கொரோனா பரவல் காரணமாக திறக்கப்படாமல் உள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும் அந்த கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் கொரோனா காரணமாக நடத்தப்படாமல் உள்ளன. தற்போது கொரோனா பரவல் குறைவாக இருப்பதால் இந்த தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என மாணவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில் இது குறித்து பதிவாளர் வெளியிட்ட அறிவிப்பின் படி ஜூலை, செப்டம்பர் மாதங்களில் சட்ட படிப்புகளுக்கான தேர்வுகள் ஆன்லைன் மூலமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.