ஆகஸ்ட் 25 முதல் 9, 10 & 11 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – கல்வி அமைச்சர் அறிவிப்பு!
கர்நாடகாவில் கொரோனா கட்டுப்பாடுகளில் இருந்து அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளில் ஒரு பகுதியாக 9, 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி முதல் பள்ளிகளை மீண்டும் திறக்க அரசு முடிவு செய்துள்ளது.
பள்ளிகள் திறப்பு
நாடு முழுவதும் கொரோனா 2 ஆம் அலை தாக்கம் குறைந்து வருவதையடுத்து கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டுள்ள பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கர்நாடகா மாநிலத்திலும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி முதல் 9, 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்காக நேரடி வகுப்புகள் துவங்க இருப்பதாக மாநில கல்வி அமைச்சர் பி சி நாகேஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கர்நாடகாவில் 9, 10 மற்றும் 11 உள்ளிட்ட வகுப்புகளுக்கு மட்டும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் 20% குறைப்பு – ஆசிரியர்கள் கோரிக்கை!
இந்த நேரடி வகுப்புகள் அனைத்தும் அரசு வெளியிடும் முறையான கொரோனா செயல்பாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட வேண்டும்’ என்று பள்ளிக் கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார். அதன் படி பள்ளிகள் திறப்பது குறித்த புதிய செயல்பாடுகள் நாளை (ஆகஸ்ட் 10) வெளியிடப்பட உள்ளது. இந்த
அறிவிப்புக்கு முன்னதாக சுகாதாரம் மற்றும் கல்வி வல்லுநர்கள், அமைச்சர்கள் மற்றும் மூத்த மாநில அதிகாரிகளுடனான சந்திப்புக்குப் பிறகு கர்நாடகாவில் பள்ளிகளை மீண்டும் திறக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
முன்னதாக, முதல்வர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், வகுப்புகள் அனைத்தும் மாற்று நாட்களில் செயல்பட அனுமதிக்கப்படலாம் என்று முடிவு செய்யப்பட்டது. இதற்கிடையில் இந்த புதிய அறிவிப்பு இன்று (ஆகஸ்ட் 9) வெளியாகியுள்ளது. பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்படும் போது மாணவர்கள் பள்ளி வளாகங்களுக்குள் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, சானிடைசர் உபயோகம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.