பஞ்சாப் மாநிலத்தில் பள்ளி விடுமுறை மேலும் 1 வாரத்திற்கு நீட்டிப்பு – அடர் பனிமூட்டம் எதிரொலி!!
பஞ்சாப் மாநிலத்தில் குளிர் கால விடுமுறை டிசம்பர் 25 முதல் ஜனவரி 1ம் தேதி வரை என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மாநிலத்தில் மேலும் சில நாட்களுக்கு அடர் பனிமூட்டம் காணப்படும் என வானிலை மையம் எச்சரித்துள்ளதால் பள்ளி விடுமுறை நாட்களை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பள்ளி விடுமுறை
நாட்டில் பனிக்காலம் தொடங்கியதிலிருந்து பல்வேறு மாநிலங்களில் பனிப்பொழிவு அதிகரித்து வருகிறது. இதனால் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளுக்கு குளிர்கால விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் குறிப்பாக டெல்லி, உத்தரகாண்ட், பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
இதில் பஞ்சாப் மாநிலத்தில் குளிர் கால விடுமுறை டிசம்பர் 25ம் தேதி முதல் ஜனவரி 1ம் தேதி வரை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மாநிலத்தில் அடுத்த 3 நாட்களுக்கு அடர் பனிமூட்டம் காணப்படும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதனால் மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி பள்ளி விடுமுறை நாட்களை நீட்டிப்பு செய்வதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
மேலும் இவர் கூறியிருப்பதாவது, மாநிலத்தில் அனைத்து அரசு/அரசு உதவி பெறும்/அங்கீகரிக்கப்பட்ட/தனியார் பள்ளிகளுக்கு (இன்று) ஜனவரி 2ம் தேதி முதல் ஜனவரி 8ம் தேதி வரை பள்ளி நாட்களை நீட்டிப்பு செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜனவரி 9ம் தேதி முதல் அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.