தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு 2022 – ஷாக் ரிப்போர்ட்!
தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசு வழங்கும் 21 வகை பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்.
பொங்கல் பரிசுத்தொகுப்பு:
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திமுக தலைமையிலான அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், நெய், கரும்பு, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கடுகு, சீரகம், மல்லி தூள், மிளகு, புளி, கோதுமை மாவு, ரவை, உப்பு, மிளகு உள்ளிட்ட 21 வகை பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவித்தது. அதன்படி கடந்த 4ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஓரு ரேஷன் கடையில் தினமும் 200 குடும்பங்கள் வீதம் டோக்கன் முறையில் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி – அரசின் முக்கிய அறிவிப்பு!
இந்த நிலையில் பொங்கல் பரிசுத் தொகை வழங்கப்படாதாது மக்களுக்கு சற்று ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பொங்கல் பரிசாக ரூ.5000 வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. அதனை தொடர்ந்து பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகத்தில் முறைகேடுகள் நடைபெறுவதாகவும், பொருட்கள் தரமற்றதாக இருப்பதாவும் புகார்கள் எழுந்து வருகிறது. இது குறித்து எதிர்க்கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் பரிசுத்தொகுப்பில் பொருட்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. பெரும்பாலான ரேஷன் கடைகளில் பரிசுத்தொகுப்பு பைகளில் வழங்கப்படவில்லை, வீட்டில் இருந்து பைகளை எடுத்து வரும் படி ஊழியர்கள் கூறுகின்றனர்.
பள்ளிகளுக்கு 3 நாட்கள் பொங்கல் விடுமுறை – அரசு அறிவிப்பு!
பொருட்களின் எடை குறைவாக உள்ளது. வட மாநிலங்களில் இருந்து பொருட்களை கொள்முதல் செய்து தரமற்ற பொருட்களையே வழங்குகின்றனர். முதல்வர் ஆய்வு செய்த பிறகும் இது போன்ற தரமற்ற பொருட்கள் தொடர்ந்து விநியோகிக்கப்பட்டு வருகிறது. பரிசுத் தொகுப்பில் கரும்பு வழங்குவதிலும் முறைகேடு நடைபெற்று வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார். பொங்கல் பண்டிகையின் போது வழங்கப்படும் இலவச வேட்டி – சேலைகளை இந்த ஆண்டு வழங்கவில்லை. மேலும் ரொக்கப் பணமும் வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.