SBI வங்கி வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு – மோசடி எச்சரிக்கை!

0
SBI வங்கி வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு - மோசடி எச்சரிக்கை!
SBI வங்கி வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு - மோசடி எச்சரிக்கை!
SBI வங்கி வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு – மோசடி எச்சரிக்கை!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங் ஆப் இந்தியா (SBI) வங்கி, பண பரிமாற்றத்தின் போது ஏற்படும் மோசடிகளை குறித்து தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய எச்சரிப்பை வெளியிட்டுள்ளது.

மோசடி எச்சரிக்கை

தற்போதுள்ள டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் பண மோசடிகள் ஆங்காங்கே நிகழ்ந்து வருகிறது. இத்தகைய மோசடிகளில் இருந்து பணத்தை பாதுகாக்க, SBI வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு அறிவிப்பை கொடுத்துள்ளது. இது தொடர்பான SBI வங்கியின் ட்வீட்டில் தனது வாடிக்கையாளர்களை இணைய மோசடிகளுக்கு எதிராக எச்சரிக்கை செய்துள்ளது. மேலும் ஒருவரது கணக்கில் ஏதேனும் அசாதாரண செயல்பாடுகள் இருந்தால் அவற்றை உடனடியாக இணைய குற்றங்களுக்கு அறிவிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்தில் கடைகள் திறப்பு நேரம் மாற்றம் – காவல்துறை எச்சரிக்கை!

அதாவது, ‘SBI வாடிக்கையாளர்களது கணக்கில் சந்தேகத்திற்கிடமான செயல்கள் தோன்றினால் அவற்றை புறக்கணிக்க வேண்டாம். இது போன்ற சைபர் குற்றங்களுக்கு எச்சரிக்கையாக இருங்கள். இந்த செயல்பாடுகள் இருப்பது கண்டறியப்பட்டால் cybercrime.gov.in என்ற இணையதளத்தில் உடனடியாக தெரிவிக்கவும்’ என கேட்டுக்கொண்டுள்ளது. இது தவிர 155260 என்ற டோல் பிரீ எண்ணை தொடர்பு கொண்டும் மோசடி குறித்த புகார்களை சைபர் கிரைம் அமைப்புக்கு தெரிவிக்கலாம்.

அந்த வகையில் SBI வாடிக்கையாளர் தனது வங்கி கணக்கில் அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனையை உடனடியாக தெரிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு செய்ய, ஒருவர் தனது டெபிட் கார்டு அல்லது இணைய வங்கி வசதிகளை 1800111109 என்ற வாடிக்கையாளர் பராமரிப்பு மையத்தில் தொடர்பு கொண்டு தடுக்க வேண்டும். இது தவிர SBI வாடிக்கையாளர் இணைய மோசடிகளைத் தவிர்க்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டு சில வழிமுறைகளை விளக்கியுள்ளது. அதன் படி

  • முதலில் சமூக ஊடகங்களில் வங்கி கணக்கு குறித்த தனிப்பட்ட விவரங்களைப் பகிரக்கூடாது
  • அதாவது கொரோனா தடுப்பூசி சான்றிதழ் அல்லது முக்கியமான விவரங்களைக் கொண்ட எந்த ஆவணத்தையும் பகிர்ந்து கொள்ளக்கூடாது.
  • ஒருவரது நம்பகத்தன்மையை சரிபார்க்காமல் நிதிபரிமாற்றம் செய்யக்கூடாது
  • ஒருவர் சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சலைப் பெற்றால், அதைத் திறக்கக் கூடாது.
    சரிபார்க்கப்படாத இணைப்புகளைக் கிளிக் செய்வதை தவிர்க்க வேண்டும்

TN Job “FB  Group” Join Now

  • டெபிட் கார்டு விவரங்கள் அல்லது ஐஎன்பி சான்றுகள் மற்றும் இது தொடர்புடைய தகவல்களை யாருடனும் பகிர்ந்து கொள்ளக்கூடாது
  • போலி செய்திகள் மற்றும் தவறான தகவல்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
  • ஒருவேளை இத்தகைய மோசடிகளால் பாதிக்கப்பட்டால், நேரத்தை வீணாக்காமல் உடனடியாக cybercrime.gov.in என்ற சைபர் கிரைம் இணையத்தில் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!