கோவை மாவட்டத்தில் கடைகள் திறப்பு நேரம் மாற்றம் – காவல்துறை எச்சரிக்கை!
2019ம் ஆண்டின் இறுதியில் துவங்கி உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்து வந்த நிலையில் தளர்வுகளுடனான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது மீண்டும் கோவையில் கொரோனா தோற்று பரவும் விகிதம் அதிகரித்து வருகிறது. இதனை தொடர்ந்து பல்வேறு விதிமுறைகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதிகரிக்கும் கொரோனா:
நாளுக்கு நாள் படிப்படியாக அதிகரித்து வந்த கொரோனா தொற்றின் தாக்கம் தற்போது படிப்படியாக குறைந்து வரும் நிலையில் தளர்வுகளுடனான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாகபல்வேறு கட்டுப்பாட்டு விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. அதனடிப்படையில் அத்தியாவசிய பொருட்களான பால் விற்பனையகங்கள், மருந்தகங்கள் தவிர மற்ற கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டு உள்ளது.
ஆதார் அட்டையில் முகவரியை எப்படி மாற்றுவது? முழு விவரம் இதோ!
நேற்று முதல் இது போன்ற பல கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. வணிக நிறுவனங்கள் அதிகம் உள்ள பெரிய கடை வீதி, ஒப்பணக்கார வீதி, ரங்கே கவுடர் வீதி உள்ளிட்ட இடங்களில் பண்டிகை காலமான ஆடி பெருக்கிற்கு துணி எடுக்க குவிந்த போது மக்கள் சமூக இடைவெளி இன்றியும், முகக்கவசம் அணிதல் போன்ற தடுப்பு நடவடிக்கைகளை பின் தொடராததாலும் போலீஸ் அதிகாரிகள் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதனை தொடர்ந்து கடைகளில் இருந்து பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு கடைகள் அடைக்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
இது குறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அதில் “பால், காய்கறி போன்று மளிகைக் கடைகளில் விற்கப்படும் அரிசி, பருப்பு, எண்ணெய் ஆகியவையும் அத்தியாவசியப் பொருட்களே. அதனால் மளிகை கடைகள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி அவரை செயல்பட அனுமதி வழங்க வேண்டும். தற்போது ஹோட்டல்களுக்கு காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை அமர்ந்து உணவு அருந்தவும், அதன் பிறகு இரவு 9 மணி வரை பார்சல் வழங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.