2020-21 ஆம் நிதியாண்டில் ரூ.1.53 லட்சம் கோடி வாரகடன்கள் தள்ளுபடி – SBI வங்கி முதலிடம்!!
நாடு முழுவதும் 2020-21 நிதியாண்டில் ரூ.1.53 லட்சம் கோடி மதிப்பிலான வாரகடன்களை வங்கிகள் ரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாராக்கடன் ரத்து:
நாடு முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் பல மக்கள் பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனால் பலர் வங்கிகளில் கடன் பெற்று திருப்பி செலுத்தமுடியாத நிலை ஏற்பட்டது. இந்த கடன் தொகைகளில் வாரகடனாக அறிவிக்கப்பட்டன. ஒவ்வொரு நிதியாண்டு முடிவிலும் வசூலிக்க முடியாத வார கடன்களை வங்கிகள் தள்ளுபடி செய்து வருகின்றனர்.
இந்தியாவில் மொத்த விலை பணவீக்க விகிதம் 12.94% உயர்வு – ஒன்றிய அரசு தகவல்!
வாரகடன்களின் மதிப்பை குறைப்பதற்காக வங்கிகளில் இவ்வாறு செய்து வருவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் 2020-21 ஆம் நிதியாண்டில் மட்டும் ரூ.1,53 லட்சம் கோடி வரை வாரகடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இது இரண்டாவது அதிக தொகையாகும்.
TN Job “FB Group” Join Now
அதிகபட்சமாக கடந்த 2018-19 ஆம் ஆண்டில் ரூ.2.54 லட்சம் கோடி வாராக்கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் அதிகமாக பெரும் நிறுவனங்களின் கடன்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு வாரகடன்களை தள்ளுபடி செய்வதில் SBI வாங்கி முன்னிலை வகிக்கிறது. YES வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி அடுத்த இடங்களில் உள்ளது.
வாராக்கடன் தள்ளுபடி செய்த வங்கிகள்:
- எஸ்பிஐ வங்கி – ரூ.34,403 கோடி
- யெஸ் வங்கி – ரூ.17,208 கோடி
- பஞ்சாப் வங்கி – ரூ. 15,877 கோடி
- பரோடா வங்கி – ரூ. 14,878 கோடி
- ஆக்சிஸ் வங்கி – ரூ. 13,906 கோடி
- ஐசிஐசிஐ வங்கி – ரூ. 9,608 கோடி
- யுசிஓ வங்கி – ரூ.9,411 கோடி
- சென்ட்ரல் வங்கி – ரூ. 5,993 கோடி
- ஆண்டுதோறும் தள்ளுபடி செய்யப்பட்ட வாரகடன்கள்:
- 2017-18 – ரூ.1.44 லட்சம் கோடி
- 2018-19 – ரூ. 2.54 லட்சம் கோடி
- 2019-20 – ரூ. 1.45 லட்சம் கோடி
- 2020-21 – ரூ. 1.53 லட்சம் கோடி